முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

IAS IPS CIVIL SERVICE EXAM

 

இந்தியக் குடியியல் பணிகள் தேர்வு



      இந்தியக் குடியியல் பணிகள் தேர்வு (Civil Services Examination (CSE) என்பது அகில இந்திய அளவில் இந்தியக் குடியியல் பணிகள் அதிகாரிகளுக்கான இந்திய நடுவண் அரசின் ஒன்றிய அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் (UPSE) ஆண்டுதோறும் நடத்தப்படும் போட்டித் தேர்வாகும். இப்போட்டித் தேர்வின் குறைந்தபட்சக் கல்வித் தகுதி ஒரு இளநிலை பட்டம் ஆகும். இப்போட்டித் தேர்வு மூன்று நிலைகளில் நடத்தப்படுகிறது. தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஓராண்டு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது.

தகுதிகள்

கல்வித்தகுதி

  • இந்தியக் குடிமகனாக இருக்க வேண்டும்
  • குறைந்த பட்ச கல்வி தகுதி, இந்தியப் பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு

      இப்போட்டித்தேர்வில் கலந்து கொள்ள குறைந்த பட்ச வயது 21 ஆகும்.  அதிக பட்ச வயது வரம்பு, பொதுப் பிரிவினருக்கு 32 வயது, இதர பிற்படுத்த பிரிவினருக்கு 35 வயது, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கு 37 வயதாகும்.

தேர்வு எழுத வாய்ப்பு

      இப்போட்டித் தேர்வுகள் வகுப்பு வாரியாக குறிப்பிட்ட தடவைகள் மட்டும் எழுதலாம்

      பொதுப் பிரிவினர் மற்றும் கிரீமிலேயேர் (Creamy Layer in OBC) அதிக பட்சமாக ஆறு முறை எழுதலாம்

      இதர பிற்படுத்த வகுப்பினர் அதிக பட்சமாக ஏழு முறை எழுதலாம்

      தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர்கள் எத்தனை முறை வேண்டுமானாலும் எழுதலாம்.

தேர்வில் இடஒதுக்கீடு

      இப்போட்டித் தேர்வில் மதிப்பெண்கள் மற்றும் இந்திய அரசின் இட ஒதுக்கீடு கொள்கைகளின்படி போட்டியாளர்களைத் தெரிவு செய்வர்

வகுப்பினர்                                                                     இட ஒதுக்கீடு

தாழ்த்தப்பட்ட வகுப்பினர்கள் (SC)                                  15.0%

பழங்குடியின வகுப்பினர்கள் (ST)                                     7.5%

இதர பிற்படுத்த வகுப்பினர் (OBC)                                       27%

மொத்த இட ஒதுக்கீடு                                                            49.5%

பொது (SC/ST மற்றும் OBC பிரிவினர் உட்பட)      50.5%

தேர்வு முறைகள்

இத்தேர்வு மூன்று நிலைகளில் நடத்தப்படுகின்றன

முதனிலை தேர்வு (Premilinary) கொள்குறி வகைத் (புலனறிவு) தேர்வாக நடத்தப்படுகிறது.

முதனிலையில் தேறியவர்கள் முதன்மைத் தேர்வுக்கு (Main Examination) அனுமதிக்கப்படுகின்றனர்.

முதன்மைத் தேர்வானது இரு கட்டங்களை உடையது. விளக்க எழுத்துத் தேர்வு (Descriptive written) & நேர்முகத் தேர்வு (Interview Test)

முதன்மைத் விளக்க எழுத்துத் தேர்வில் பெற்றோர் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர்

  • முறையே முதன்மைத் விளக்க எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வில் பெற்ற மதிப்பெண்களைக் கூட்டி ஒன்றிய அரசுப்பணியாளர் தேர்வாணையம் பரிந்துரைகளை மத்திய பணியாளர் அமைச்சகத்துக்கு  அனுப்பும்
  • பரிந்துரைகளின் அடிப்படையில் அமைச்சகம் தேர்வானோருக்கான பணி ஆணைகளை வழங்கும்

காலிப்பணியிடங்கள் - 712

தேர்வுக்கட்டணம் MBC, BC, GENERAL - ரூ.100

SC,ST, FEMALE - PWBD - தேர்வுக்கட்டணம் செலுத்தத்தேவையில்லை

கடைசித்தேதி

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி : 24.03.2021

மேலும் விவரங்களுக்கு

https://www.upsc.gov.in/sites/default/files/Notice-CSP-2021-Engl-04032021.pdf

 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மேல்மலையனூர் அருள்மிகு அங்காள பரமேஸ்வரி அம்மன்

    மேல்மலையனூர் அருள்மிகு      அங்காள    பரமேஸ்வரி அம்மன்       தமிழ்நாட்டில் அதிசய சம்பவங்கள் நடைபெற்று வரும் ஆலயங்கள் ஏராளம் உள்ளன . அவற்றில் குறிப்பிடத்தக்கது விழுப்புரம் மாவட்டத்திலுள்ள மேல்மலையனூர் அருள்மிகு அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் , தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு நலமும் , வளமும் வழங்கி வரும் ஆற்றல் மிக்க சக்தியாக அங்காள பரமேஸ்வரி அம்மன் விலங்குகிறார் . புற்று கோவில்       அமாவாசை நாட்களில் ஆலயத்தில் கூட்டம் நிரம்பி வழியும் , கருவறையில் உள்ள புற்றையே தேவியாக வழிபட்டு பூசிக்கிண்டறார்கள் . வருடாந்திர உற்சவத்தின் பொது கிராமத்தினர் புதிய தேரில் அவளை உட்கார வைத்து ஊர்வலமாக எடுத்து செல்கிறார்கள் . பௌர்ணமி தினங்களில் அந்த ஆலயம் பக்தர்கள் வந்து வணங்க இருபத்தி நான்கு மணிநேரமும் திறந்து வைக்கப்பட்டு உள்ளது . பல கிராமத்திலும் இருந்து வரும் மக்கள் அங்கு வந்து பொங்கல் படைக்கின்றார்கள் . பிப்ரவரி - மார்ச் மாதங்களில் அங்காள ...

THIRIPALA திரிபலா சூரணம்

  திரிபலா அமிர்தம்   திரிபலா சூரணம்       நெல்லிக்காய் , கடுக்காய் , தான்றிக்காய் என மூன்று பொருள்களையும் சேர்த்து தயாரிக்கப்படும் பொடிதான் திரிபலா சூரணம் . இதை காயகல்பம் என்றும் நித்ய ரசாயனம் என்றும் அழைக்கிறார்கள் . மருந்துகளில் அமிர்தம் என்றும் இதை சொல்லலாம் . உடலில் நோய் வராமலும் நோயை தீர்க்கும் அற்புத மருந்தாகவும் இவை செயல்படுகிறது . நெல்லிக்காய்  ( Ribes uva-crispa) நெல்லிக்காயில் வைட்டமின் சி அதிகமாக உள்ளது . இது உடலில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது . மேலும் இது ஒரு சிறந்த ஆன்டி ஆக்சிடென்ட் என்பதால் உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்ற உதவுகிறது . நுரையீரலை வலிமையாக்கி புத்துணர்ச்சி கொடுக்கிறது . சுவாச பாதையில் உள்ள சளியைய்   போக்க உதவுகிறது . நெல்லிக்காயில் உள்ள வைட்டமின் சி , மாதவிடாய் சுழற்சிகளை ஒழுங்குபடுத்துவதற்கும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் நல்ல இனப்பெருக்க ஆரோக்கியத்தை பராமரிக்கவும் உதவுகிறது . ...

KADUKKAI கடுக்காய்

  கடுக்காய் இறைவன் படைத்த அற்புதம் மரம்       கடுக்காய் என்பது மரத்திலிருந்து கிடைக்கும் காய். இந்த மரம் கடல் மட்டத்திலிருந்து சுமார் ஆயிரம் அடிக்கு மேல்    தான் வளரும்.   இது இந்தியா, சீனா, இலங்கை, மலேசியா, வியட்நாம் ஆகிய நாடுகளில் வளரக்கூடியது. இதன் காலம் சுமார் 4000 ஆண்டுகளுக்கு முற்பட்டது என சித்த மருத்துவ நூல்கள் கூறுகிறது. இந்த மரம் கிட்டத்தட்ட 60 அடி உயரத்திற்கு மேல் வளரும் தன்மை கொண்டது. இந்த கடுக்காய் மரம் கருமையான கெட்டியான பட்டைகளைக் கொண்டிருக்கும், அதன் அடிப்பாகம் சுமார் 1.5 அடி வரை இருக்கும். இந்த கடுக்காய் மரம் குளிர் காலத்தில் இலைகளை உதிர்த்து கோடை காலத்தின் தொடக்கத்தில் துளிர் விட ஆரம்பித்து சித்திரை, வைகாசி மாதங்களில் காய்கள் காய்க்கத் தொடங்கும். இலைகளை எதிர் அடுக்கில் அமைந்திருக்கும். இவை சிறுகாம்புடன் முட்டை வடிவத்தில் இருக்கும். பூவும் காயும்       பூக்கள் பச்சை நிறமும் வெண்மை நிறமும் கலந்ததாக இருக்கும். அதிக மணமெல்லாம் இருக்காது. மிக மிக மெல்லிய மணத்துடன் காணப்படும். சில வகை கடுக்காய் பூ...