முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

IAS IPS CIVIL SERVICE EXAM

 

இந்தியக் குடியியல் பணிகள் தேர்வு



      இந்தியக் குடியியல் பணிகள் தேர்வு (Civil Services Examination (CSE) என்பது அகில இந்திய அளவில் இந்தியக் குடியியல் பணிகள் அதிகாரிகளுக்கான இந்திய நடுவண் அரசின் ஒன்றிய அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் (UPSE) ஆண்டுதோறும் நடத்தப்படும் போட்டித் தேர்வாகும். இப்போட்டித் தேர்வின் குறைந்தபட்சக் கல்வித் தகுதி ஒரு இளநிலை பட்டம் ஆகும். இப்போட்டித் தேர்வு மூன்று நிலைகளில் நடத்தப்படுகிறது. தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஓராண்டு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது.

தகுதிகள்

கல்வித்தகுதி

  • இந்தியக் குடிமகனாக இருக்க வேண்டும்
  • குறைந்த பட்ச கல்வி தகுதி, இந்தியப் பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு

      இப்போட்டித்தேர்வில் கலந்து கொள்ள குறைந்த பட்ச வயது 21 ஆகும்.  அதிக பட்ச வயது வரம்பு, பொதுப் பிரிவினருக்கு 32 வயது, இதர பிற்படுத்த பிரிவினருக்கு 35 வயது, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கு 37 வயதாகும்.

தேர்வு எழுத வாய்ப்பு

      இப்போட்டித் தேர்வுகள் வகுப்பு வாரியாக குறிப்பிட்ட தடவைகள் மட்டும் எழுதலாம்

      பொதுப் பிரிவினர் மற்றும் கிரீமிலேயேர் (Creamy Layer in OBC) அதிக பட்சமாக ஆறு முறை எழுதலாம்

      இதர பிற்படுத்த வகுப்பினர் அதிக பட்சமாக ஏழு முறை எழுதலாம்

      தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர்கள் எத்தனை முறை வேண்டுமானாலும் எழுதலாம்.

தேர்வில் இடஒதுக்கீடு

      இப்போட்டித் தேர்வில் மதிப்பெண்கள் மற்றும் இந்திய அரசின் இட ஒதுக்கீடு கொள்கைகளின்படி போட்டியாளர்களைத் தெரிவு செய்வர்

வகுப்பினர்                                                                     இட ஒதுக்கீடு

தாழ்த்தப்பட்ட வகுப்பினர்கள் (SC)                                  15.0%

பழங்குடியின வகுப்பினர்கள் (ST)                                     7.5%

இதர பிற்படுத்த வகுப்பினர் (OBC)                                       27%

மொத்த இட ஒதுக்கீடு                                                            49.5%

பொது (SC/ST மற்றும் OBC பிரிவினர் உட்பட)      50.5%

தேர்வு முறைகள்

இத்தேர்வு மூன்று நிலைகளில் நடத்தப்படுகின்றன

முதனிலை தேர்வு (Premilinary) கொள்குறி வகைத் (புலனறிவு) தேர்வாக நடத்தப்படுகிறது.

முதனிலையில் தேறியவர்கள் முதன்மைத் தேர்வுக்கு (Main Examination) அனுமதிக்கப்படுகின்றனர்.

முதன்மைத் தேர்வானது இரு கட்டங்களை உடையது. விளக்க எழுத்துத் தேர்வு (Descriptive written) & நேர்முகத் தேர்வு (Interview Test)

முதன்மைத் விளக்க எழுத்துத் தேர்வில் பெற்றோர் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர்

  • முறையே முதன்மைத் விளக்க எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வில் பெற்ற மதிப்பெண்களைக் கூட்டி ஒன்றிய அரசுப்பணியாளர் தேர்வாணையம் பரிந்துரைகளை மத்திய பணியாளர் அமைச்சகத்துக்கு  அனுப்பும்
  • பரிந்துரைகளின் அடிப்படையில் அமைச்சகம் தேர்வானோருக்கான பணி ஆணைகளை வழங்கும்

காலிப்பணியிடங்கள் - 712

தேர்வுக்கட்டணம் MBC, BC, GENERAL - ரூ.100

SC,ST, FEMALE - PWBD - தேர்வுக்கட்டணம் செலுத்தத்தேவையில்லை

கடைசித்தேதி

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி : 24.03.2021

மேலும் விவரங்களுக்கு

https://www.upsc.gov.in/sites/default/files/Notice-CSP-2021-Engl-04032021.pdf

 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

REGISTATION DEPARTMENT பதிவுத்துறையில் வேலை

  தமிழக அரசின் பதிவுத்துறையில் வேலை வாய்ப்பு அறிவிப்பு முத்திரைத்தாள் விற்பனையாளர் பணி   STAMP VENDOR        தமிழ்நாடு பதிவுத்துறையின் கீழ் செயல்படும் சார்பதிவாளர் அலுவலகத்தில் முத்திரைத்தாள் விற்பனையாளர் பணிக்கு விண்ணப்பங்கள் மாவட்ட பதிவாளர் அலுவலகங்களில் பெற்றுக்கொள்ளலாம் . தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 790 காலிப்பணியிடங்கள் உள்ளன . மாவட்ட வாரியாக காலியிடங்கள் கொடுக்கப்பட்டுள்ளன . மாவட்ட வாரியாக காலியிடங்கள் விவரம் 1. வட சென்னை - 31 2. தென் சென்னை - 38 3. மத்திய சென்னை - 21 4. காஞ்சிபுரம் - 51 5. செங்கல்பட்டு - 5 6. வேலூர் - 58 7. அரக்கோணம் - 5 8. செய்யாறு - 39 9. திருவண்ணாமலை - 8 10. சேலம் ( கிழக்கு ) - 8 11. சேலம் ( மேற்கு ) - 10 12. நாமக்கல் - 16 13. தர்மபுரி - 9 14. கிருஷ்ணகிரி - 11 15. கடலூர் - 11 16. விழுப்புரம் - 6 17. சிதம்பரம் - 4 18. திண்டிவனம் - 3 19. கள்ளக்குறிச்சி   - 9 20. விருத்தாசலம் - 19 21. புதுக்கோட்டை - 11 22. அரியலூர் - 23 23...

மெட்ராஸ் உயர்நீதிமன்றம் சென்னை

  மெட்ராஸ் உயர்நீதிமன்றம் சென்னை       தமிழகத்தில் உள்ள அனைத்து கீழமை நீதி மன்றங்களில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் , நகல் பிரிவு அலுவலர் , சுகாதாரப் பணியாளர் , துப்புரவு பணியாளர் , தூய்மைப் பணியாளர் , தோட்டக்காரர் , தண்ணீர் ஊற்றுபவர் , காவலாளி , இரவுக் காவலர் , வாட்டர்மேன் மற்றும் வாட்டர்வுமன் , மசால்ஜி காலிப்பணியிடங்களை நிரப்ப இணையவழி விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன . நீதித்துறை மாவட்டந்தோறும் காலிப்பணியிடங்களின் விவரமும் வெளியிடப்பட்டுள்ளன .   மொத்த   காலிப்பணியிடங்கள் : 3557   பணியின் பெயர் மற்றும் காலிப்பணியிடங்களின்   விவரம்   1. அலுவலக உதவியாளர் - 1911 2. அலுவலக உதவியாளர் மற்றும் முழுநேர காவலர் - 1 3. நகல் பிரிவு அலுவலர் - 3 4. சுகாதார பணியாளர் - 110 5. தூய்மை பணியாளர் - 6 6. தூய்மை / துப்புரவு பணியாளர் - 17 7. தூய்மை / சுகாதாரப் பணியாளர் - 1 8. தோட்டக்காரர் - 28 9. காவலர் - 496 10. இரவுக்காவலர் - 185 11. இரவுக்காவலர் மற்றும் மசால்ஜி - 1...

GRAMA UDAVIYALAR VILLAGE ASSISTANT

  திருவள்ளூர் மாவட்டத்தில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு             திருவள்ளூர் மாவட்ட வருவாய்துறைக்கு உட்பட்ட வருவாய் வட்டம் வாரியாக காலியாக உள்ள கிராம உதவியாளர் காலிப்பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன .   பணி   -   கிராம உதவியாளர் பணிக்காலியிடங்கள் - 145 கல்வித்தகுதி - 5 ம்   வகுப்பு தேர்ச்சி மிதி வண்டி ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்   இதர தகுதி : மனுதாரர் விண்ணப்பிக்கும் கிராமத்தில் / வட்டத்தில் நிரந்தரமாக வசிப்பவராக இருக்க வேண்டும்.   வயது - 01.07.2020 அன்று   மனுதாரர் 21 வயது நிரம்பியவராக   இருக்க வேண்டும் . பொதுப்பிரிவினர் - 21 க்கு மேல் 30 க்குள் BC, MBC ,   SC ,ST         - 21 க்கு மேல் 35 க்குள்                          ...