முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

REPUBLIC DAY குடியரசுதினம்

 

குடியரசுதினம்



விடுதலை நாள்

            1930ஆம் ஆண்டு நடந்த அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டில் இந்திய விடுதலை இயக்கத்தினர் "பூர்ண சுவராஜ்" (முழுமையான சுதந்திரம்) என்ற அறை கூவலை மகாத்மா காந்தியடிகள் அவர்களால் பரிந்துரைத்து உறுதிமொழி மூலம் நாடு முழுவதும் பிரகடனப்படுத்தப்பட்டது.

உறுதிமொழி

            "பொருளாதாரம், அரசியல், கலாச்சாரம், ஆன்மிகம் ஆகிய நான்கு விதத்திலும் நமது தாய் நாட்டிற்குக் கேடு விளைவித்துவரும் ஓர் அரசாட்சிக்கு அடங்கி நடப்பது, மனிதனுக்கும் இறைவனுக்கும் செய்யும் துரோகம்".

குடியரசுநாள்

            1930 ஆம் ஆண்டு ஜனவரி 26ஆம் நாள் முதற்கட்டமாக "சுதந்திர நாளாகக்" கொண்டாடப்படவேண்டும்  என மாநாட்டில்  கேட்டுக்கொள்ளப்பட்டது. மகாத்மா காந்தியடிகள் இனி ஆண்டு தோறும் ஜனவரி 26 ஆம் நாளை சுதந்திர தினமாக கொண்டாடி ஆங்கிலேயர்களுக்கு தங்களுடைய எதிர்ப்பை வெளிப்படுத்துமாறு அனைவருக்கும் உத்தரவிட்டார். இந்தியா ஆங்கிலேயர்களிடமிருந்து சுதந்திரம் வாங்குவதற்கு முன்பு, ஜனவரி 26-ஆம் நாள் தான் சுதந்திர தினமாக கொண்டாடப்பட்டு வந்தது.

குடியரசு தினத்திற்கான அரசியலமைப்பு

            1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 28 ஆம் நாள் ஒரு நிரந்தர அரசியலமைப்பை உருவாக்கி, அதன் தலைவராக பி ஆர் அம்பேத்கர் நியமிக்கப்பட்டார். அவர் 1947 ஆம் ஆண்டு நவம்பர் 4 ஆம் நாள் ஒரு வரைவு அரசியலமைப்பினை சமர்ப்பித்தார். 2 ஆண்டுகள் 11 மாதங்கள் 166 நாட்கள் பொது திறந்த அமர்வுகளில் பல விவாதங்கள்  நடைபெற்று கடைசியாக 1950 ஆம்  ஆண்டு ஜனவரி 24 ஆம் நாள் 308 பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒப்புதலுடன் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில் நிரந்தர அரசியலமைப்பு உருவாக்கப்பட்டது. அதன்பிறகு இரண்டு நாட்கள் கழித்து, 1950ஆம் ஆண்டு விடுதலை பெறுவதற்கு 17 ஆண்டுகளுக்கு முன்பே மகாத்மா காந்தியடிகள் அவர்களால் ஏற்படுத்திய விடுதலை நாளான ஜனவரி 26 ஆம் நாளை மக்களாட்சி மலர்ந்த தினமாகக் (குடியரசுதினம்) கொண்டாட நேரு அமைச்சரவை முடிவு செய்து, 1950 ஆம்  ஆண்டு முதல் ஜனவரி 26 ஆம் நாளை குடியரசு தினமாக கொண்டாடி வருகிறோம்.

தேசிய தலைநகர் டெல்லி

1. நாட்டின் தலைநகர் டெல்லியில் இந்தியப் பிரதமர், மறைந்த இந்தியப்படை வீரர்களுக்காக இந்தியா கேட்டில் உள்ள அமர்சோதிக்கு வீரவணக்கம் செலுத்துவதுடன் தொடங்கும் விழாவில் குடியரசுத் தலைவர் மூவண்ணக் கொடியை ஏற்றி படைவீரர்களின் அணிவகுப்பை பார்வையிடுகிறார்.

2. தலைநகர் டில்லியில் குடியரசு நாள் அன்று குடியரசு தின விழா அணிவகுப்பு நடைபெறும்

3.கடந்த ஆண்டில் நாட்டிற்கு மிகப்பெரும் சேவை புரிந்த படைவீரர்களுக்கான பதக்கங்களும் விருதுகளும் வழங்கப்படுகின்றன.

மாநிலத் தலைநகர்

1. மாநிலங்களில் மாநில ஆளுநர் கொடியேற்றத்துடன் காவலர் அணிவகுப்பையும், அரசுத்துறை மிதவைகளையும், பண்பாட்டு நிகழ்ச்சிகளையும் பார்வையிடுகிறார்.

2. சிறந்த காவலர்களுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன.

தேசியக்கொடி



இந்திய மண்ணின் சுதந்திரத்திற்காக பாடுபட்ட அனைத்து தலைவர்களும் நினைவு கூறும் வகையில் சுதந்திரதினம் மற்றும் குடியரசு தினம் ஆகிய நாட்களில் இந்திய நாட்டு மக்கள் அனைவரும் இந்திய தேசியக் கொடியினை தங்களது ஆடையில் குத்தி மகிச்சியினை வெளிப்படுத்துவர்.

கொண்டாட்டம்

      1950 ஜனவரி 26 ஆம் நாளில் நம் நாடு குடியரசு நாடாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த நாளையே நாம் குடியரசு தினமாக வருடந்தோறும் கொண்டாடி வருகிறோம்.

  • ஒவ்வொரு வருடமும் ஜனவரி 26 ஆம் நாள் நம்முடைய தாய் நாட்டைக் காக்க தமது இன்னுயிரையும் நீத்த தியாகிகளை நினைவுகூறும் வகையில் விடுமுறை அளிக்கப்பட்டு, நாடெங்கும் அனைத்து பள்ளிகளிலும், கல்லூரிகளிலும், அலுவலகங்களிலும் தேசிய கீதம் பாடப்பட்டு கொடியேற்றப்படுகிறது.
  • ஆண்டுதோறும் குடியரசு தினத்தன்று சிறந்த சேவை புரிந்தோருக்கும், வீர தீர சாகசம் புரிந்தவர்களுக்கும்  விருதுகள், பாராட்டுகள், பதக்கங்கள் வழங்கி கௌரவிக்கப்படுகிறது.
  • அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி கொண்டாடுகிறோம்.

தியாகம்

   இன்றைய இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்பதில் பெருமைக் கொள்கிறோம் என்றால் அதன் பின்னணியில் லட்சக்கணக்கான போராளிகளின் குருதியும், ஆயிரக்கணக்கான தேசத் தலைவர்களின் தியாகமும் மறைந்திருக்கிறது என்பதை யாராலும் மறுக்க இயலாது.

வேற்றுமையில் ஒற்றுமை

   இந்தியா சுமார் 125 கோடிக்கும் மேல் மக்கள் தொகையைக் கொண்ட நாடாக இருந்தாலும், சாதி, மதம், மொழி எனப் பல வேறுபாடுகள் இருந்தாலும் நாம் அனைவரும் இந்தியர்கள் என்ற ஒற்றை வார்த்தையில் பெருமையடைவோம்.

   அனைவருக்கும் 72 வது குடியரசு தின நல்வாழ்த்துக்கள்.

 

ஜெய்ஹிந்த்....

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

IAS IPS CIVIL SERVICE EXAM

  இந்தியக் குடியியல் பணிகள் தேர்வு       இந்தியக் குடியியல் பணிகள் தேர்வு ( Civil Services Examination (CSE) என்பது அகில இந்திய அளவில் இந்தியக் குடியியல் பணிகள் அதிகாரிகளுக்கான இந்திய நடுவண் அரசின் ஒன்றிய அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் (UPSE) ஆண்டுதோறும் நடத்தப்படும் போட்டித் தேர்வாகும் . இப்போட்டித் தேர்வின் குறைந்தபட்சக் கல்வித் தகுதி ஒரு இளநிலை பட்டம் ஆகும் . இப்போட்டித் தேர்வு மூன்று நிலைகளில் நடத்தப்படுகிறது . தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஓராண்டு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது . தகுதிகள் கல்வித்தகுதி இந்தியக் குடிமகனாக இருக்க வேண்டும் குறைந்த பட்ச கல்வி தகுதி , இந்தியப் பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் . வயது வரம்பு       இப்போட்டித்தேர்வில் கலந்து கொள்ள குறைந்த பட்ச வயது 21 ஆகும் .   அதிக பட்ச வயது வரம்பு , பொதுப் பிரிவினருக்கு 32 வயது , இதர பிற்படுத்த ப...

TN VAZHAKAADAL THURAI

  வேலைவாய்ப்பு தமிழ்நாடு வழக்காடல் துறை       அரசு தலைமை வழக்குரைஞர்   அலுவலகத்தில் ( சென்னை உயர்நீதி மன்றம் மற்றும் சென்னை உயர்நீதி மன்ற மதுரை கிளை ) 16 அலுவலக உதவியாளர் காலிப்பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன . பணி   -   அலுவலக உதவியாளர் பணிக்காலியிடங்கள் - 16         விவரங்கள் கல்வித்தகுதி - 8 ம்   வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும்.   நான்கு சக்கர வாகன உரிமம் பெற்ற விண்ணப்பதாரர்களுக்கு   முன்னுரிமை வழங்கப்படும் . வயது - 01.07.2020 அன்று 18 வயது நிரம்பியவராக   இருக்க வேண்டும் . பொதுப்பிரிவினர் - 18 க்கு மேல் 30 க்குள் BC,MBC                            - 18 க்கு மேல் 32 க்குள் SC,ST                      ...

மேல்மலையனூர் அருள்மிகு அங்காள பரமேஸ்வரி அம்மன்

    மேல்மலையனூர் அருள்மிகு      அங்காள    பரமேஸ்வரி அம்மன்       தமிழ்நாட்டில் அதிசய சம்பவங்கள் நடைபெற்று வரும் ஆலயங்கள் ஏராளம் உள்ளன . அவற்றில் குறிப்பிடத்தக்கது விழுப்புரம் மாவட்டத்திலுள்ள மேல்மலையனூர் அருள்மிகு அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் , தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு நலமும் , வளமும் வழங்கி வரும் ஆற்றல் மிக்க சக்தியாக அங்காள பரமேஸ்வரி அம்மன் விலங்குகிறார் . புற்று கோவில்       அமாவாசை நாட்களில் ஆலயத்தில் கூட்டம் நிரம்பி வழியும் , கருவறையில் உள்ள புற்றையே தேவியாக வழிபட்டு பூசிக்கிண்டறார்கள் . வருடாந்திர உற்சவத்தின் பொது கிராமத்தினர் புதிய தேரில் அவளை உட்கார வைத்து ஊர்வலமாக எடுத்து செல்கிறார்கள் . பௌர்ணமி தினங்களில் அந்த ஆலயம் பக்தர்கள் வந்து வணங்க இருபத்தி நான்கு மணிநேரமும் திறந்து வைக்கப்பட்டு உள்ளது . பல கிராமத்திலும் இருந்து வரும் மக்கள் அங்கு வந்து பொங்கல் படைக்கின்றார்கள் . பிப்ரவரி - மார்ச் மாதங்களில் அங்காள ...