முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

REPUBLIC DAY குடியரசுதினம்

 

குடியரசுதினம்



விடுதலை நாள்

            1930ஆம் ஆண்டு நடந்த அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டில் இந்திய விடுதலை இயக்கத்தினர் "பூர்ண சுவராஜ்" (முழுமையான சுதந்திரம்) என்ற அறை கூவலை மகாத்மா காந்தியடிகள் அவர்களால் பரிந்துரைத்து உறுதிமொழி மூலம் நாடு முழுவதும் பிரகடனப்படுத்தப்பட்டது.

உறுதிமொழி

            "பொருளாதாரம், அரசியல், கலாச்சாரம், ஆன்மிகம் ஆகிய நான்கு விதத்திலும் நமது தாய் நாட்டிற்குக் கேடு விளைவித்துவரும் ஓர் அரசாட்சிக்கு அடங்கி நடப்பது, மனிதனுக்கும் இறைவனுக்கும் செய்யும் துரோகம்".

குடியரசுநாள்

            1930 ஆம் ஆண்டு ஜனவரி 26ஆம் நாள் முதற்கட்டமாக "சுதந்திர நாளாகக்" கொண்டாடப்படவேண்டும்  என மாநாட்டில்  கேட்டுக்கொள்ளப்பட்டது. மகாத்மா காந்தியடிகள் இனி ஆண்டு தோறும் ஜனவரி 26 ஆம் நாளை சுதந்திர தினமாக கொண்டாடி ஆங்கிலேயர்களுக்கு தங்களுடைய எதிர்ப்பை வெளிப்படுத்துமாறு அனைவருக்கும் உத்தரவிட்டார். இந்தியா ஆங்கிலேயர்களிடமிருந்து சுதந்திரம் வாங்குவதற்கு முன்பு, ஜனவரி 26-ஆம் நாள் தான் சுதந்திர தினமாக கொண்டாடப்பட்டு வந்தது.

குடியரசு தினத்திற்கான அரசியலமைப்பு

            1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 28 ஆம் நாள் ஒரு நிரந்தர அரசியலமைப்பை உருவாக்கி, அதன் தலைவராக பி ஆர் அம்பேத்கர் நியமிக்கப்பட்டார். அவர் 1947 ஆம் ஆண்டு நவம்பர் 4 ஆம் நாள் ஒரு வரைவு அரசியலமைப்பினை சமர்ப்பித்தார். 2 ஆண்டுகள் 11 மாதங்கள் 166 நாட்கள் பொது திறந்த அமர்வுகளில் பல விவாதங்கள்  நடைபெற்று கடைசியாக 1950 ஆம்  ஆண்டு ஜனவரி 24 ஆம் நாள் 308 பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒப்புதலுடன் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில் நிரந்தர அரசியலமைப்பு உருவாக்கப்பட்டது. அதன்பிறகு இரண்டு நாட்கள் கழித்து, 1950ஆம் ஆண்டு விடுதலை பெறுவதற்கு 17 ஆண்டுகளுக்கு முன்பே மகாத்மா காந்தியடிகள் அவர்களால் ஏற்படுத்திய விடுதலை நாளான ஜனவரி 26 ஆம் நாளை மக்களாட்சி மலர்ந்த தினமாகக் (குடியரசுதினம்) கொண்டாட நேரு அமைச்சரவை முடிவு செய்து, 1950 ஆம்  ஆண்டு முதல் ஜனவரி 26 ஆம் நாளை குடியரசு தினமாக கொண்டாடி வருகிறோம்.

தேசிய தலைநகர் டெல்லி

1. நாட்டின் தலைநகர் டெல்லியில் இந்தியப் பிரதமர், மறைந்த இந்தியப்படை வீரர்களுக்காக இந்தியா கேட்டில் உள்ள அமர்சோதிக்கு வீரவணக்கம் செலுத்துவதுடன் தொடங்கும் விழாவில் குடியரசுத் தலைவர் மூவண்ணக் கொடியை ஏற்றி படைவீரர்களின் அணிவகுப்பை பார்வையிடுகிறார்.

2. தலைநகர் டில்லியில் குடியரசு நாள் அன்று குடியரசு தின விழா அணிவகுப்பு நடைபெறும்

3.கடந்த ஆண்டில் நாட்டிற்கு மிகப்பெரும் சேவை புரிந்த படைவீரர்களுக்கான பதக்கங்களும் விருதுகளும் வழங்கப்படுகின்றன.

மாநிலத் தலைநகர்

1. மாநிலங்களில் மாநில ஆளுநர் கொடியேற்றத்துடன் காவலர் அணிவகுப்பையும், அரசுத்துறை மிதவைகளையும், பண்பாட்டு நிகழ்ச்சிகளையும் பார்வையிடுகிறார்.

2. சிறந்த காவலர்களுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன.

தேசியக்கொடி



இந்திய மண்ணின் சுதந்திரத்திற்காக பாடுபட்ட அனைத்து தலைவர்களும் நினைவு கூறும் வகையில் சுதந்திரதினம் மற்றும் குடியரசு தினம் ஆகிய நாட்களில் இந்திய நாட்டு மக்கள் அனைவரும் இந்திய தேசியக் கொடியினை தங்களது ஆடையில் குத்தி மகிச்சியினை வெளிப்படுத்துவர்.

கொண்டாட்டம்

      1950 ஜனவரி 26 ஆம் நாளில் நம் நாடு குடியரசு நாடாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த நாளையே நாம் குடியரசு தினமாக வருடந்தோறும் கொண்டாடி வருகிறோம்.

  • ஒவ்வொரு வருடமும் ஜனவரி 26 ஆம் நாள் நம்முடைய தாய் நாட்டைக் காக்க தமது இன்னுயிரையும் நீத்த தியாகிகளை நினைவுகூறும் வகையில் விடுமுறை அளிக்கப்பட்டு, நாடெங்கும் அனைத்து பள்ளிகளிலும், கல்லூரிகளிலும், அலுவலகங்களிலும் தேசிய கீதம் பாடப்பட்டு கொடியேற்றப்படுகிறது.
  • ஆண்டுதோறும் குடியரசு தினத்தன்று சிறந்த சேவை புரிந்தோருக்கும், வீர தீர சாகசம் புரிந்தவர்களுக்கும்  விருதுகள், பாராட்டுகள், பதக்கங்கள் வழங்கி கௌரவிக்கப்படுகிறது.
  • அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி கொண்டாடுகிறோம்.

தியாகம்

   இன்றைய இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்பதில் பெருமைக் கொள்கிறோம் என்றால் அதன் பின்னணியில் லட்சக்கணக்கான போராளிகளின் குருதியும், ஆயிரக்கணக்கான தேசத் தலைவர்களின் தியாகமும் மறைந்திருக்கிறது என்பதை யாராலும் மறுக்க இயலாது.

வேற்றுமையில் ஒற்றுமை

   இந்தியா சுமார் 125 கோடிக்கும் மேல் மக்கள் தொகையைக் கொண்ட நாடாக இருந்தாலும், சாதி, மதம், மொழி எனப் பல வேறுபாடுகள் இருந்தாலும் நாம் அனைவரும் இந்தியர்கள் என்ற ஒற்றை வார்த்தையில் பெருமையடைவோம்.

   அனைவருக்கும் 72 வது குடியரசு தின நல்வாழ்த்துக்கள்.

 

ஜெய்ஹிந்த்....

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மெட்ராஸ் உயர்நீதிமன்றம் சென்னை

  மெட்ராஸ் உயர்நீதிமன்றம் சென்னை       தமிழகத்தில் உள்ள அனைத்து கீழமை நீதி மன்றங்களில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் , நகல் பிரிவு அலுவலர் , சுகாதாரப் பணியாளர் , துப்புரவு பணியாளர் , தூய்மைப் பணியாளர் , தோட்டக்காரர் , தண்ணீர் ஊற்றுபவர் , காவலாளி , இரவுக் காவலர் , வாட்டர்மேன் மற்றும் வாட்டர்வுமன் , மசால்ஜி காலிப்பணியிடங்களை நிரப்ப இணையவழி விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன . நீதித்துறை மாவட்டந்தோறும் காலிப்பணியிடங்களின் விவரமும் வெளியிடப்பட்டுள்ளன .   மொத்த   காலிப்பணியிடங்கள் : 3557   பணியின் பெயர் மற்றும் காலிப்பணியிடங்களின்   விவரம்   1. அலுவலக உதவியாளர் - 1911 2. அலுவலக உதவியாளர் மற்றும் முழுநேர காவலர் - 1 3. நகல் பிரிவு அலுவலர் - 3 4. சுகாதார பணியாளர் - 110 5. தூய்மை பணியாளர் - 6 6. தூய்மை / துப்புரவு பணியாளர் - 17 7. தூய்மை / சுகாதாரப் பணியாளர் - 1 8. தோட்டக்காரர் - 28 9. காவலர் - 496 10. இரவுக்காவலர் - 185 11. இரவுக்காவலர் மற்றும் மசால்ஜி - 1...

பனை மர பயன்கள்

  பனை மரம் ( மருத்துவ வரம் )       பனை தமிழ்நாட்டின் மாநில மரமாகும் . பனை புல்லினத்தைச் சேர்ந்த ஒரு தாவரப் பேரினம் . அறிவியல் வகைப்பாட்டில் இதைப் போரசசு (BORASSUS) என்னும் பேரினத்தில் அடக்குவர் இப்பேரினத்தில் பல சிற்றினங்கள் அடங்குகின்றன . பனைகள் பொதுவாகப் பயிரிடப்படுவதில்லை . இயற்கையிலே தானாகவே வளர்ந்து பெருகுகின்றன . இளம் பனைகள் வடலி என்று அழைக்கப்படுகின்றன . காணப்படும் இடங்கள்       ஆசிய நாடுகளில்தான் பனைகள் அதிகம் காணப்படுகின்றன . தற்காலத்தில் ஆசியாவில் இந்தியா , இலங்கை , மலேசியா , இந்தோனேஷியா , மியான்மர் , தாய்லாந்து , வியட்னாம் , சீனா போன்ற மேற்கு ஆப்பிரிக்கா நாடுகளிலும் காணப்படுகின்றன . வளரும் சூழ்நிலை       வெப்ப மற்றும் மித வெப்ப மண்டல பகுதிகளில் மணல் வெளிகளில் நன்கு வளரக்கூடியது . சராசரி வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் என்ற போதிலும் 50 டிகிரி செல்சியஸ் வரை தாங்கி வளரக்கூடியது . வறண்ட சூழலில் 500 முதல் 900 மி . மீ வரை சராச...

IFS FOREST EXAMINATIONS இந்திய வனத்துறை அதிகாரி

  இந்திய வனத்துறை அதிகாரி (IFS) காலியிடப் பணிக்கான அறிவிப்பு - 2021       மத்திய அரசின் கீழ் காலியாக உள்ள வனத்துறை அதிகாரி பணியிடங்களை நிரப்பிடும் வகையில் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர் . மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் இப்பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர் . இதற்குத் தகுதியும் / விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம் .   மொத்த காலிப்பணியிடம் : 110 கல்வித்தகுதி கால்நடை பராமரிப்பு மற்றும் கால்நடை அறிவியல் , வேதியியல் , புவியியல் , கணிதம் , இயற்பியல் , புள்ளியியல் மற்றும் விலங்கியல் அல்லது விவசாயம் , வனவியல் போன்ற ஏதேனும் ஒர்த் துறையினை முதன்மைப் பாடமாகக் கொண்டு இளங்கலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் . வயது வரம்பு 1.8.2021 தேதியின்படி MBC , BC - 21- க்கு மேல் 35- க்குள் இருக்க வேண்டும் SC,ST   - 21- க்கு மேல் 37- க்குள் இருக்க வேண்டும் பொதுப்பிரிவினர் 21- க்கு மேல் 32- க்குள் இருக்க வேண்டும் தேர்வுக்கட்டணம...