முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

REPUBLIC DAY குடியரசுதினம்

 

குடியரசுதினம்



விடுதலை நாள்

            1930ஆம் ஆண்டு நடந்த அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டில் இந்திய விடுதலை இயக்கத்தினர் "பூர்ண சுவராஜ்" (முழுமையான சுதந்திரம்) என்ற அறை கூவலை மகாத்மா காந்தியடிகள் அவர்களால் பரிந்துரைத்து உறுதிமொழி மூலம் நாடு முழுவதும் பிரகடனப்படுத்தப்பட்டது.

உறுதிமொழி

            "பொருளாதாரம், அரசியல், கலாச்சாரம், ஆன்மிகம் ஆகிய நான்கு விதத்திலும் நமது தாய் நாட்டிற்குக் கேடு விளைவித்துவரும் ஓர் அரசாட்சிக்கு அடங்கி நடப்பது, மனிதனுக்கும் இறைவனுக்கும் செய்யும் துரோகம்".

குடியரசுநாள்

            1930 ஆம் ஆண்டு ஜனவரி 26ஆம் நாள் முதற்கட்டமாக "சுதந்திர நாளாகக்" கொண்டாடப்படவேண்டும்  என மாநாட்டில்  கேட்டுக்கொள்ளப்பட்டது. மகாத்மா காந்தியடிகள் இனி ஆண்டு தோறும் ஜனவரி 26 ஆம் நாளை சுதந்திர தினமாக கொண்டாடி ஆங்கிலேயர்களுக்கு தங்களுடைய எதிர்ப்பை வெளிப்படுத்துமாறு அனைவருக்கும் உத்தரவிட்டார். இந்தியா ஆங்கிலேயர்களிடமிருந்து சுதந்திரம் வாங்குவதற்கு முன்பு, ஜனவரி 26-ஆம் நாள் தான் சுதந்திர தினமாக கொண்டாடப்பட்டு வந்தது.

குடியரசு தினத்திற்கான அரசியலமைப்பு

            1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 28 ஆம் நாள் ஒரு நிரந்தர அரசியலமைப்பை உருவாக்கி, அதன் தலைவராக பி ஆர் அம்பேத்கர் நியமிக்கப்பட்டார். அவர் 1947 ஆம் ஆண்டு நவம்பர் 4 ஆம் நாள் ஒரு வரைவு அரசியலமைப்பினை சமர்ப்பித்தார். 2 ஆண்டுகள் 11 மாதங்கள் 166 நாட்கள் பொது திறந்த அமர்வுகளில் பல விவாதங்கள்  நடைபெற்று கடைசியாக 1950 ஆம்  ஆண்டு ஜனவரி 24 ஆம் நாள் 308 பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒப்புதலுடன் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில் நிரந்தர அரசியலமைப்பு உருவாக்கப்பட்டது. அதன்பிறகு இரண்டு நாட்கள் கழித்து, 1950ஆம் ஆண்டு விடுதலை பெறுவதற்கு 17 ஆண்டுகளுக்கு முன்பே மகாத்மா காந்தியடிகள் அவர்களால் ஏற்படுத்திய விடுதலை நாளான ஜனவரி 26 ஆம் நாளை மக்களாட்சி மலர்ந்த தினமாகக் (குடியரசுதினம்) கொண்டாட நேரு அமைச்சரவை முடிவு செய்து, 1950 ஆம்  ஆண்டு முதல் ஜனவரி 26 ஆம் நாளை குடியரசு தினமாக கொண்டாடி வருகிறோம்.

தேசிய தலைநகர் டெல்லி

1. நாட்டின் தலைநகர் டெல்லியில் இந்தியப் பிரதமர், மறைந்த இந்தியப்படை வீரர்களுக்காக இந்தியா கேட்டில் உள்ள அமர்சோதிக்கு வீரவணக்கம் செலுத்துவதுடன் தொடங்கும் விழாவில் குடியரசுத் தலைவர் மூவண்ணக் கொடியை ஏற்றி படைவீரர்களின் அணிவகுப்பை பார்வையிடுகிறார்.

2. தலைநகர் டில்லியில் குடியரசு நாள் அன்று குடியரசு தின விழா அணிவகுப்பு நடைபெறும்

3.கடந்த ஆண்டில் நாட்டிற்கு மிகப்பெரும் சேவை புரிந்த படைவீரர்களுக்கான பதக்கங்களும் விருதுகளும் வழங்கப்படுகின்றன.

மாநிலத் தலைநகர்

1. மாநிலங்களில் மாநில ஆளுநர் கொடியேற்றத்துடன் காவலர் அணிவகுப்பையும், அரசுத்துறை மிதவைகளையும், பண்பாட்டு நிகழ்ச்சிகளையும் பார்வையிடுகிறார்.

2. சிறந்த காவலர்களுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன.

தேசியக்கொடி



இந்திய மண்ணின் சுதந்திரத்திற்காக பாடுபட்ட அனைத்து தலைவர்களும் நினைவு கூறும் வகையில் சுதந்திரதினம் மற்றும் குடியரசு தினம் ஆகிய நாட்களில் இந்திய நாட்டு மக்கள் அனைவரும் இந்திய தேசியக் கொடியினை தங்களது ஆடையில் குத்தி மகிச்சியினை வெளிப்படுத்துவர்.

கொண்டாட்டம்

      1950 ஜனவரி 26 ஆம் நாளில் நம் நாடு குடியரசு நாடாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த நாளையே நாம் குடியரசு தினமாக வருடந்தோறும் கொண்டாடி வருகிறோம்.

  • ஒவ்வொரு வருடமும் ஜனவரி 26 ஆம் நாள் நம்முடைய தாய் நாட்டைக் காக்க தமது இன்னுயிரையும் நீத்த தியாகிகளை நினைவுகூறும் வகையில் விடுமுறை அளிக்கப்பட்டு, நாடெங்கும் அனைத்து பள்ளிகளிலும், கல்லூரிகளிலும், அலுவலகங்களிலும் தேசிய கீதம் பாடப்பட்டு கொடியேற்றப்படுகிறது.
  • ஆண்டுதோறும் குடியரசு தினத்தன்று சிறந்த சேவை புரிந்தோருக்கும், வீர தீர சாகசம் புரிந்தவர்களுக்கும்  விருதுகள், பாராட்டுகள், பதக்கங்கள் வழங்கி கௌரவிக்கப்படுகிறது.
  • அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி கொண்டாடுகிறோம்.

தியாகம்

   இன்றைய இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்பதில் பெருமைக் கொள்கிறோம் என்றால் அதன் பின்னணியில் லட்சக்கணக்கான போராளிகளின் குருதியும், ஆயிரக்கணக்கான தேசத் தலைவர்களின் தியாகமும் மறைந்திருக்கிறது என்பதை யாராலும் மறுக்க இயலாது.

வேற்றுமையில் ஒற்றுமை

   இந்தியா சுமார் 125 கோடிக்கும் மேல் மக்கள் தொகையைக் கொண்ட நாடாக இருந்தாலும், சாதி, மதம், மொழி எனப் பல வேறுபாடுகள் இருந்தாலும் நாம் அனைவரும் இந்தியர்கள் என்ற ஒற்றை வார்த்தையில் பெருமையடைவோம்.

   அனைவருக்கும் 72 வது குடியரசு தின நல்வாழ்த்துக்கள்.

 

ஜெய்ஹிந்த்....

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

REGISTATION DEPARTMENT பதிவுத்துறையில் வேலை

  தமிழக அரசின் பதிவுத்துறையில் வேலை வாய்ப்பு அறிவிப்பு முத்திரைத்தாள் விற்பனையாளர் பணி   STAMP VENDOR        தமிழ்நாடு பதிவுத்துறையின் கீழ் செயல்படும் சார்பதிவாளர் அலுவலகத்தில் முத்திரைத்தாள் விற்பனையாளர் பணிக்கு விண்ணப்பங்கள் மாவட்ட பதிவாளர் அலுவலகங்களில் பெற்றுக்கொள்ளலாம் . தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 790 காலிப்பணியிடங்கள் உள்ளன . மாவட்ட வாரியாக காலியிடங்கள் கொடுக்கப்பட்டுள்ளன . மாவட்ட வாரியாக காலியிடங்கள் விவரம் 1. வட சென்னை - 31 2. தென் சென்னை - 38 3. மத்திய சென்னை - 21 4. காஞ்சிபுரம் - 51 5. செங்கல்பட்டு - 5 6. வேலூர் - 58 7. அரக்கோணம் - 5 8. செய்யாறு - 39 9. திருவண்ணாமலை - 8 10. சேலம் ( கிழக்கு ) - 8 11. சேலம் ( மேற்கு ) - 10 12. நாமக்கல் - 16 13. தர்மபுரி - 9 14. கிருஷ்ணகிரி - 11 15. கடலூர் - 11 16. விழுப்புரம் - 6 17. சிதம்பரம் - 4 18. திண்டிவனம் - 3 19. கள்ளக்குறிச்சி   - 9 20. விருத்தாசலம் - 19 21. புதுக்கோட்டை - 11 22. அரியலூர் - 23 23. கரூர் - 4 24. தஞ்சாவூர் - 6

TNEB FIELD ASSISTANT TRAINEE

  தமிழக மின்வாரியத்தில் (TNEB) வேலை வாய்ப்பு  Field Asssistant (Trainee)       கடந்த ஆண்டு (NOTIFICATION NO.05/2020, 19.03.2020) Field Assistant (Trainee) கள உதவியாளர் ( பயிற்சி ) என்ற வேலை வாய்ப்பினை தமிழக மின்வாரியத் துறை அறிவித்தது . கொரோனா காரணமாக அறிவிப்பு நிறுத்தப்பட்டது . இந்த ஆண்டு (2021) மீண்டும் தமிழக மின்வாரிய துறை கள உதவியாளர் ( பயிற்சி ) வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிடப்பட்டது .   மொத்த காலியிடங்கள் : 2900 பணி : Field Asssistant (Trainee) கல்வித்தகுதி : ITI   வயது : SC , SC (A), ST and Destitute Widows of all castes   : 18 க்கு மேல் 35 க்குள் MBC / DC, BCO, BCM               : 18 க்கு மேல் 32 க்குள் பொதுப்பிரிவினர்               : 18 க்கு மேல் 30 க்குள்   கட்டணம் OC, BCD, BCM, MBC/DC   - Rs.1000/- SC, SCA, ST                       - Rs.500/- Destitute Widows and differently abled persons     - Rs.500/-   விண்ணப்பிக்க ஆரம்ப தேதி :15.02.2021 கடைசி தேதி                              : 16.03.2021

MATHIYA ARASU VELLAI

  மத்திய அரசு வேலை   10 ம்  வகுப்பு படித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை     மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள MTS பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வை பணியாளர்கள் தேர்வாணையம் அறிவித்துள்ளது .       மத்திய அரசின் கீழ் இயங்கும் பல்வேறு துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்களை பணியாளர்கள் தேர்வாணையம் மூலம் தேர்வு நடத்தி நிரப்பப்பட்டு வருகிறது . அந்த வகையில் , தற்போது MTS எனப்படும் MULTI TASKING STAFF உதவியாளர்கள் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது . அரசுப் பணிக்கு எதிர்நோக்கி தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு இது ஓர் அரிய   வாய்ப்பாகும் . இதற்கு தகுதியும் , விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் .  இது பற்றிய விவரம் பின்வருமாறு அமைப்பு               :     மத்திய அரசு பதவி                      :      MTS (MULTI TASKING STAFF) மொத்த காலியிடங்கள்   :    இந்தியா முழுவதும் தகுதி                      :     10 ம் வகுப்பு தேர்ச்சி வயது  பொது பிரிவினர் : 18 லிருந்து 25 க்குள்