முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஆரோக்கியமாக வாழ்வோம்


ஆரோக்கியமாக வாழ்வோம்



            'உண்டி கொடுத்தார் உயிர் கொடுத்தார்' என்ற சொல்லிற்கிணங்க, உயிர்வாழ முக்கிய காரணிகளில் உணவும் ஒன்று. நாம் உண்ணும் உணவே நமது உடல் செல்களை உருவாக்குகிறது. உணவின் தன்மை நமது உடல் உறுப்புகளின் தன்மையாக மாறுகிறது.எவ்வளவு உணவு உண்கிறோம் என்பதைவிட செறிக்கக்கூடிய உணவினை உண்கிறோமா என்பதை தான் முக்கியம். உண்ணும் உணவு உடல் செல்களை உருவாக்கக்கூடியதாக அமைதல் அவசியம்.

ஆரோக்கிய உணவுகள்



      உடலுக்கு ஆரோக்கியமான செல்களை உருவாக்கும் உணவுகளான கீரைகள், காய்கறிகள், பழங்கள், பயறு வகைகள், அரிசி, கோதுமை, சிறு தானியங்கள், கிழங்கு வகைகள் போன்றவற்றை சரிவிகிதத்தில் உணவில் சேர்ப்பதுடன் , பச்சை காய்கறிகள் மற்றும் கீரைகள் என்றும் நம் உணவுத்தட்டில் கட்டாயமாக்கப்படவேண்டும். முளைக்கட்டிய தானியங்கள், பழச்சாறுகள் போன்றவற்றிற்கு முக்கியத்துவம் தரலாம். நிறைந்த காய்கனிகளுடன் உண்ணும் உணவே உடலுக்கும் மனதுக்கும் பொருத்தமான உணவாக அமையும்.



நோய்களை உருவாக்கும் சில காரணிகள்

நிறமிகள்

      உணவினை அழகுபடுத்த நாம் பயன்படுத்தும் பல நிறமிகளும் நம் உடலிற்கு ஒவ்வாதனவாகவே உள்ளன. நாம் பயன்படுத்தும் செயற்கை நிறங்கள் நம் கண்களுக்கு வேண்டுமானால்  குளிர்ச்சியாக இருக்கலாம், ஆனால் நம் உள் உறுப்புகளான சிறுநீரகங்கள், கல்லீரல் போன்றவற்றிற்கு அவை  கேடுவிளைவிக்கின்றன. சீரணத்தை குறைத்து உணவினை உடலுடன் சேர விடாமல் தடுக்கிறது. அது மட்டுமல்லாமல் குடல்களின் வேலைகளை சீரற்றுபோகச் செய்கின்றது. மலச்சிக்கல், குடல்புண், சர்க்கரைநோய் போன்ற நோய்களுக்கு அடித்தளமாகிறது. நம் கண்களை கவருகிற ஒரே காரணத்திற்காக பேக்கரி (அடுமனை) உணவுகளுக்கு முக்கியத்துவம் தந்து நம் உடலை நோயுற்றதாக மாற்றுகிறோம். பிறந்தநாள் கேக் துவங்கி ஜிலேபி, பீட்சா, பர்கர், லட்டு, மிட்டாய்கள், ஐஸ்கிரீம், பஜ்ஜி என அனைத்து திண்பண்டங்களும் இன்று நிறமிகள் சேர்த்தே உருவாக்கப்படுகின்றன. இவற்றை மொத்தமாக தவிர்க்க வேண்டும்.

மைதா

      நாம் உண்ணும் உணவில் தரமற்றது என்றால் மைதாவைத்தான் கூற வேண்டும். நார்ச்சத்து அறவே இல்லாத இந்த உணவு மலச்சிக்கலுக்கு மூல காரணமாக அமைந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் இதில் சேர்க்கும் இரசாயன கலவைகள் சர்க்கரை நோய், இரத்த அழுத்தம், இதய நோய் மற்றும் கல்லீரல் நோய்களை உருவாக்கும் காரணிகளாக உள்ளன. பேக்கரிகளில் உருவாகும் பல உணவுகளில் மைதா முக்கியமான பொருளாக உள்ளது. நாம் அன்றாடம் சுவைக்கும் பிஸ்கட், பிரட், பரோட்டா போன்றவை சிறுவர்களின் சுவை நரம்பினை சுண்டி இழுக்கக்கூடியனவாக அமைந்துள்ளன. சிறுவர்களின் உடல் பருமன் கூடுவதற்கு மைதா சேர்ந்த உணவுகள் முக்கியமான காரணியாக உள்ளன. ஆகையால் மைதா உணவுகளை தவிர்க்கும் கட்டாயத்தில் நாம் உள்ளோம்.

எண்ணெய்

      உடலுக்கு தேவையான 100 சதவிகிதம் கொழுப்பால் ஆனது எண்ணெய். ஆனால் எண்ணெய் ஒரு சமைக்கும் பொருள் அல்ல. எண்ணெய் அதிக சூடானதென்றால் அதன் கொழுப்பு நமது உடலுக்கு பயனற்றதாகிவிடுவது மட்டுமில்லாமல் விஷமாகவும் மாறும். இரத்த குழாய்களில் படியும் தன்மைகொண்டதாக மாறிவிடும். எண்ணெயில் சமைத்த உணவு உடல் நலத்திற்கு உகந்ததல்ல, நம் மூதாதையர் சமைத்தது  போல எண்ணெயை கடைசியில் தாளிப்பதற்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும் அல்லது தெளித்து சாப்பிட வேண்டும். எண்ணெயில் சமைத்த (பொரித்த) காய்கறிகள், உணவுகள் உட்கொள்வதால் மிக கொடிய நோய்களான இதய அடைப்பு, பக்கவாதம், உடல்பருமன் போன்ற நோய்கள் உருவாகின்றன.

      இவை தவிர நாம் அன்றாடம் பயன்படுத்தும் வெண் சர்க்கரை (சீனி), அதிகமாக பயன்படுத்தும் மசாலா வகைகள், இனிப்பு வகைகள், குளிர்பானங்கள், பதனிடப்பட்ட உணவுகள், நூடுல்ஸ் போன்றவை பற்களின் பலத்தை குறைப்பதுடன் சீரண சக்தியை குறைத்து நெஞ்சிசெரித்தல், அல்சர் எனும் வயிற்றுப்புண், மலச்சிக்கல், சர்க்கரை நோய், தோல் நோய்கள், எலும்பு பலவீனம், வைட்டமின் குறைபாடுகள், இரத்த சோகை, ஹார்மோன் பிரச்சனைகள் என நம்மை ஒரு நோயாளியாக்கி விடுகிறது. இந்த நோய்களிலிருந்து நாம் தற்காத்துக்கொள்ள வேண்டுமானால், மேற்குறிப்பிட்ட உணவுகளை தவிர்த்து ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ள வேண்டும்.

''உணவால் உடலை கெடுக்காதே

உணவே மருந்து, மருந்தே உணவு'

ஆரோக்கிய உணவை உண்டு என்றும்

ஆரோக்கியமாக வாழ்வோமாக!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மெட்ராஸ் உயர்நீதிமன்றம் சென்னை

  மெட்ராஸ் உயர்நீதிமன்றம் சென்னை       தமிழகத்தில் உள்ள அனைத்து கீழமை நீதி மன்றங்களில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் , நகல் பிரிவு அலுவலர் , சுகாதாரப் பணியாளர் , துப்புரவு பணியாளர் , தூய்மைப் பணியாளர் , தோட்டக்காரர் , தண்ணீர் ஊற்றுபவர் , காவலாளி , இரவுக் காவலர் , வாட்டர்மேன் மற்றும் வாட்டர்வுமன் , மசால்ஜி காலிப்பணியிடங்களை நிரப்ப இணையவழி விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன . நீதித்துறை மாவட்டந்தோறும் காலிப்பணியிடங்களின் விவரமும் வெளியிடப்பட்டுள்ளன .   மொத்த   காலிப்பணியிடங்கள் : 3557   பணியின் பெயர் மற்றும் காலிப்பணியிடங்களின்   விவரம்   1. அலுவலக உதவியாளர் - 1911 2. அலுவலக உதவியாளர் மற்றும் முழுநேர காவலர் - 1 3. நகல் பிரிவு அலுவலர் - 3 4. சுகாதார பணியாளர் - 110 5. தூய்மை பணியாளர் - 6 6. தூய்மை / துப்புரவு பணியாளர் - 17 7. தூய்மை / சுகாதாரப் பணியாளர் - 1 8. தோட்டக்காரர் - 28 9. காவலர் - 496 10. இரவுக்காவலர் - 185 11. இரவுக்காவலர் மற்றும் மசால்ஜி - 1...

IFS FOREST EXAMINATIONS இந்திய வனத்துறை அதிகாரி

  இந்திய வனத்துறை அதிகாரி (IFS) காலியிடப் பணிக்கான அறிவிப்பு - 2021       மத்திய அரசின் கீழ் காலியாக உள்ள வனத்துறை அதிகாரி பணியிடங்களை நிரப்பிடும் வகையில் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர் . மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் இப்பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர் . இதற்குத் தகுதியும் / விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம் .   மொத்த காலிப்பணியிடம் : 110 கல்வித்தகுதி கால்நடை பராமரிப்பு மற்றும் கால்நடை அறிவியல் , வேதியியல் , புவியியல் , கணிதம் , இயற்பியல் , புள்ளியியல் மற்றும் விலங்கியல் அல்லது விவசாயம் , வனவியல் போன்ற ஏதேனும் ஒர்த் துறையினை முதன்மைப் பாடமாகக் கொண்டு இளங்கலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் . வயது வரம்பு 1.8.2021 தேதியின்படி MBC , BC - 21- க்கு மேல் 35- க்குள் இருக்க வேண்டும் SC,ST   - 21- க்கு மேல் 37- க்குள் இருக்க வேண்டும் பொதுப்பிரிவினர் 21- க்கு மேல் 32- க்குள் இருக்க வேண்டும் தேர்வுக்கட்டணம...

பனை மர பயன்கள்

  பனை மரம் ( மருத்துவ வரம் )       பனை தமிழ்நாட்டின் மாநில மரமாகும் . பனை புல்லினத்தைச் சேர்ந்த ஒரு தாவரப் பேரினம் . அறிவியல் வகைப்பாட்டில் இதைப் போரசசு (BORASSUS) என்னும் பேரினத்தில் அடக்குவர் இப்பேரினத்தில் பல சிற்றினங்கள் அடங்குகின்றன . பனைகள் பொதுவாகப் பயிரிடப்படுவதில்லை . இயற்கையிலே தானாகவே வளர்ந்து பெருகுகின்றன . இளம் பனைகள் வடலி என்று அழைக்கப்படுகின்றன . காணப்படும் இடங்கள்       ஆசிய நாடுகளில்தான் பனைகள் அதிகம் காணப்படுகின்றன . தற்காலத்தில் ஆசியாவில் இந்தியா , இலங்கை , மலேசியா , இந்தோனேஷியா , மியான்மர் , தாய்லாந்து , வியட்னாம் , சீனா போன்ற மேற்கு ஆப்பிரிக்கா நாடுகளிலும் காணப்படுகின்றன . வளரும் சூழ்நிலை       வெப்ப மற்றும் மித வெப்ப மண்டல பகுதிகளில் மணல் வெளிகளில் நன்கு வளரக்கூடியது . சராசரி வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் என்ற போதிலும் 50 டிகிரி செல்சியஸ் வரை தாங்கி வளரக்கூடியது . வறண்ட சூழலில் 500 முதல் 900 மி . மீ வரை சராச...