முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஆரோக்கியமாக வாழ்வோம்


ஆரோக்கியமாக வாழ்வோம்



            'உண்டி கொடுத்தார் உயிர் கொடுத்தார்' என்ற சொல்லிற்கிணங்க, உயிர்வாழ முக்கிய காரணிகளில் உணவும் ஒன்று. நாம் உண்ணும் உணவே நமது உடல் செல்களை உருவாக்குகிறது. உணவின் தன்மை நமது உடல் உறுப்புகளின் தன்மையாக மாறுகிறது.எவ்வளவு உணவு உண்கிறோம் என்பதைவிட செறிக்கக்கூடிய உணவினை உண்கிறோமா என்பதை தான் முக்கியம். உண்ணும் உணவு உடல் செல்களை உருவாக்கக்கூடியதாக அமைதல் அவசியம்.

ஆரோக்கிய உணவுகள்



      உடலுக்கு ஆரோக்கியமான செல்களை உருவாக்கும் உணவுகளான கீரைகள், காய்கறிகள், பழங்கள், பயறு வகைகள், அரிசி, கோதுமை, சிறு தானியங்கள், கிழங்கு வகைகள் போன்றவற்றை சரிவிகிதத்தில் உணவில் சேர்ப்பதுடன் , பச்சை காய்கறிகள் மற்றும் கீரைகள் என்றும் நம் உணவுத்தட்டில் கட்டாயமாக்கப்படவேண்டும். முளைக்கட்டிய தானியங்கள், பழச்சாறுகள் போன்றவற்றிற்கு முக்கியத்துவம் தரலாம். நிறைந்த காய்கனிகளுடன் உண்ணும் உணவே உடலுக்கும் மனதுக்கும் பொருத்தமான உணவாக அமையும்.



நோய்களை உருவாக்கும் சில காரணிகள்

நிறமிகள்

      உணவினை அழகுபடுத்த நாம் பயன்படுத்தும் பல நிறமிகளும் நம் உடலிற்கு ஒவ்வாதனவாகவே உள்ளன. நாம் பயன்படுத்தும் செயற்கை நிறங்கள் நம் கண்களுக்கு வேண்டுமானால்  குளிர்ச்சியாக இருக்கலாம், ஆனால் நம் உள் உறுப்புகளான சிறுநீரகங்கள், கல்லீரல் போன்றவற்றிற்கு அவை  கேடுவிளைவிக்கின்றன. சீரணத்தை குறைத்து உணவினை உடலுடன் சேர விடாமல் தடுக்கிறது. அது மட்டுமல்லாமல் குடல்களின் வேலைகளை சீரற்றுபோகச் செய்கின்றது. மலச்சிக்கல், குடல்புண், சர்க்கரைநோய் போன்ற நோய்களுக்கு அடித்தளமாகிறது. நம் கண்களை கவருகிற ஒரே காரணத்திற்காக பேக்கரி (அடுமனை) உணவுகளுக்கு முக்கியத்துவம் தந்து நம் உடலை நோயுற்றதாக மாற்றுகிறோம். பிறந்தநாள் கேக் துவங்கி ஜிலேபி, பீட்சா, பர்கர், லட்டு, மிட்டாய்கள், ஐஸ்கிரீம், பஜ்ஜி என அனைத்து திண்பண்டங்களும் இன்று நிறமிகள் சேர்த்தே உருவாக்கப்படுகின்றன. இவற்றை மொத்தமாக தவிர்க்க வேண்டும்.

மைதா

      நாம் உண்ணும் உணவில் தரமற்றது என்றால் மைதாவைத்தான் கூற வேண்டும். நார்ச்சத்து அறவே இல்லாத இந்த உணவு மலச்சிக்கலுக்கு மூல காரணமாக அமைந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் இதில் சேர்க்கும் இரசாயன கலவைகள் சர்க்கரை நோய், இரத்த அழுத்தம், இதய நோய் மற்றும் கல்லீரல் நோய்களை உருவாக்கும் காரணிகளாக உள்ளன. பேக்கரிகளில் உருவாகும் பல உணவுகளில் மைதா முக்கியமான பொருளாக உள்ளது. நாம் அன்றாடம் சுவைக்கும் பிஸ்கட், பிரட், பரோட்டா போன்றவை சிறுவர்களின் சுவை நரம்பினை சுண்டி இழுக்கக்கூடியனவாக அமைந்துள்ளன. சிறுவர்களின் உடல் பருமன் கூடுவதற்கு மைதா சேர்ந்த உணவுகள் முக்கியமான காரணியாக உள்ளன. ஆகையால் மைதா உணவுகளை தவிர்க்கும் கட்டாயத்தில் நாம் உள்ளோம்.

எண்ணெய்

      உடலுக்கு தேவையான 100 சதவிகிதம் கொழுப்பால் ஆனது எண்ணெய். ஆனால் எண்ணெய் ஒரு சமைக்கும் பொருள் அல்ல. எண்ணெய் அதிக சூடானதென்றால் அதன் கொழுப்பு நமது உடலுக்கு பயனற்றதாகிவிடுவது மட்டுமில்லாமல் விஷமாகவும் மாறும். இரத்த குழாய்களில் படியும் தன்மைகொண்டதாக மாறிவிடும். எண்ணெயில் சமைத்த உணவு உடல் நலத்திற்கு உகந்ததல்ல, நம் மூதாதையர் சமைத்தது  போல எண்ணெயை கடைசியில் தாளிப்பதற்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும் அல்லது தெளித்து சாப்பிட வேண்டும். எண்ணெயில் சமைத்த (பொரித்த) காய்கறிகள், உணவுகள் உட்கொள்வதால் மிக கொடிய நோய்களான இதய அடைப்பு, பக்கவாதம், உடல்பருமன் போன்ற நோய்கள் உருவாகின்றன.

      இவை தவிர நாம் அன்றாடம் பயன்படுத்தும் வெண் சர்க்கரை (சீனி), அதிகமாக பயன்படுத்தும் மசாலா வகைகள், இனிப்பு வகைகள், குளிர்பானங்கள், பதனிடப்பட்ட உணவுகள், நூடுல்ஸ் போன்றவை பற்களின் பலத்தை குறைப்பதுடன் சீரண சக்தியை குறைத்து நெஞ்சிசெரித்தல், அல்சர் எனும் வயிற்றுப்புண், மலச்சிக்கல், சர்க்கரை நோய், தோல் நோய்கள், எலும்பு பலவீனம், வைட்டமின் குறைபாடுகள், இரத்த சோகை, ஹார்மோன் பிரச்சனைகள் என நம்மை ஒரு நோயாளியாக்கி விடுகிறது. இந்த நோய்களிலிருந்து நாம் தற்காத்துக்கொள்ள வேண்டுமானால், மேற்குறிப்பிட்ட உணவுகளை தவிர்த்து ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ள வேண்டும்.

''உணவால் உடலை கெடுக்காதே

உணவே மருந்து, மருந்தே உணவு'

ஆரோக்கிய உணவை உண்டு என்றும்

ஆரோக்கியமாக வாழ்வோமாக!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மேல்மலையனூர் அருள்மிகு அங்காள பரமேஸ்வரி அம்மன்

    மேல்மலையனூர் அருள்மிகு      அங்காள    பரமேஸ்வரி அம்மன்       தமிழ்நாட்டில் அதிசய சம்பவங்கள் நடைபெற்று வரும் ஆலயங்கள் ஏராளம் உள்ளன . அவற்றில் குறிப்பிடத்தக்கது விழுப்புரம் மாவட்டத்திலுள்ள மேல்மலையனூர் அருள்மிகு அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் , தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு நலமும் , வளமும் வழங்கி வரும் ஆற்றல் மிக்க சக்தியாக அங்காள பரமேஸ்வரி அம்மன் விலங்குகிறார் . புற்று கோவில்       அமாவாசை நாட்களில் ஆலயத்தில் கூட்டம் நிரம்பி வழியும் , கருவறையில் உள்ள புற்றையே தேவியாக வழிபட்டு பூசிக்கிண்டறார்கள் . வருடாந்திர உற்சவத்தின் பொது கிராமத்தினர் புதிய தேரில் அவளை உட்கார வைத்து ஊர்வலமாக எடுத்து செல்கிறார்கள் . பௌர்ணமி தினங்களில் அந்த ஆலயம் பக்தர்கள் வந்து வணங்க இருபத்தி நான்கு மணிநேரமும் திறந்து வைக்கப்பட்டு உள்ளது . பல கிராமத்திலும் இருந்து வரும் மக்கள் அங்கு வந்து பொங்கல் படைக்கின்றார்கள் . பிப்ரவரி - மார்ச் மாதங்களில் அங்காள ...

THIRIPALA திரிபலா சூரணம்

  திரிபலா அமிர்தம்   திரிபலா சூரணம்       நெல்லிக்காய் , கடுக்காய் , தான்றிக்காய் என மூன்று பொருள்களையும் சேர்த்து தயாரிக்கப்படும் பொடிதான் திரிபலா சூரணம் . இதை காயகல்பம் என்றும் நித்ய ரசாயனம் என்றும் அழைக்கிறார்கள் . மருந்துகளில் அமிர்தம் என்றும் இதை சொல்லலாம் . உடலில் நோய் வராமலும் நோயை தீர்க்கும் அற்புத மருந்தாகவும் இவை செயல்படுகிறது . நெல்லிக்காய்  ( Ribes uva-crispa) நெல்லிக்காயில் வைட்டமின் சி அதிகமாக உள்ளது . இது உடலில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது . மேலும் இது ஒரு சிறந்த ஆன்டி ஆக்சிடென்ட் என்பதால் உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்ற உதவுகிறது . நுரையீரலை வலிமையாக்கி புத்துணர்ச்சி கொடுக்கிறது . சுவாச பாதையில் உள்ள சளியைய்   போக்க உதவுகிறது . நெல்லிக்காயில் உள்ள வைட்டமின் சி , மாதவிடாய் சுழற்சிகளை ஒழுங்குபடுத்துவதற்கும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் நல்ல இனப்பெருக்க ஆரோக்கியத்தை பராமரிக்கவும் உதவுகிறது . ...

KADUKKAI கடுக்காய்

  கடுக்காய் இறைவன் படைத்த அற்புதம் மரம்       கடுக்காய் என்பது மரத்திலிருந்து கிடைக்கும் காய். இந்த மரம் கடல் மட்டத்திலிருந்து சுமார் ஆயிரம் அடிக்கு மேல்    தான் வளரும்.   இது இந்தியா, சீனா, இலங்கை, மலேசியா, வியட்நாம் ஆகிய நாடுகளில் வளரக்கூடியது. இதன் காலம் சுமார் 4000 ஆண்டுகளுக்கு முற்பட்டது என சித்த மருத்துவ நூல்கள் கூறுகிறது. இந்த மரம் கிட்டத்தட்ட 60 அடி உயரத்திற்கு மேல் வளரும் தன்மை கொண்டது. இந்த கடுக்காய் மரம் கருமையான கெட்டியான பட்டைகளைக் கொண்டிருக்கும், அதன் அடிப்பாகம் சுமார் 1.5 அடி வரை இருக்கும். இந்த கடுக்காய் மரம் குளிர் காலத்தில் இலைகளை உதிர்த்து கோடை காலத்தின் தொடக்கத்தில் துளிர் விட ஆரம்பித்து சித்திரை, வைகாசி மாதங்களில் காய்கள் காய்க்கத் தொடங்கும். இலைகளை எதிர் அடுக்கில் அமைந்திருக்கும். இவை சிறுகாம்புடன் முட்டை வடிவத்தில் இருக்கும். பூவும் காயும்       பூக்கள் பச்சை நிறமும் வெண்மை நிறமும் கலந்ததாக இருக்கும். அதிக மணமெல்லாம் இருக்காது. மிக மிக மெல்லிய மணத்துடன் காணப்படும். சில வகை கடுக்காய் பூ...