முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மேல்மலையனூர் அருள்மிகு அங்காள பரமேஸ்வரி அம்மன்

 

  மேல்மலையனூர் அருள்மிகு     அங்காள  பரமேஸ்வரி அம்மன்



      தமிழ்நாட்டில் அதிசய சம்பவங்கள் நடைபெற்று வரும் ஆலயங்கள் ஏராளம் உள்ளன. அவற்றில் குறிப்பிடத்தக்கது விழுப்புரம் மாவட்டத்திலுள்ள மேல்மலையனூர் அருள்மிகு அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில், தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு நலமும், வளமும் வழங்கி வரும் ஆற்றல் மிக்க சக்தியாக அங்காள பரமேஸ்வரி அம்மன் விலங்குகிறார்.

புற்று கோவில்

      அமாவாசை நாட்களில் ஆலயத்தில் கூட்டம் நிரம்பி வழியும், கருவறையில் உள்ள புற்றையே தேவியாக வழிபட்டு பூசிக்கிண்டறார்கள். வருடாந்திர உற்சவத்தின் பொது கிராமத்தினர் புதிய தேரில் அவளை உட்கார வைத்து ஊர்வலமாக எடுத்து செல்கிறார்கள். பௌர்ணமி தினங்களில் அந்த ஆலயம் பக்தர்கள் வந்து வணங்க இருபத்தி நான்கு மணிநேரமும் திறந்து வைக்கப்பட்டு உள்ளது. பல கிராமத்திலும் இருந்து வரும் மக்கள் அங்கு வந்து பொங்கல் படைக்கின்றார்கள். பிப்ரவரி-மார்ச் மாதங்களில் அங்காள பரமேஸ்வரிக்கு நடைபெறும் வருடாந்திர திருவிழாவின்போது மயான கொள்ளை என்ற பெயரில் பெரிய விழா நடக்கும்போது பக்தர்கள் அங்கு பலதரப்பட்ட தானியங்களைக் கொண்டு வந்து உணவு சமைத்து அதை அங்காள பரமேஸ்வரிக்கு படைக்கிறார்கள். அங்கு மயானத்தில் அவளை ஆராதிக்கிறார்கள். பலர் சாமி ஆடிக்கொண்டே செல்வார்கள். அதைப் பார்க்கவே பயமாக இருக்கும். அங்காள பரமேஸ்வரிக்கு நாட்டின் பல இடங்களிலும் ஆலயங்கள் உள்ளன என்றாலும் அவளுக்கு மேல்மலையனூர் ஆலயமே முக்கியமான ஆலயம்.

தோ்

      ஆண்டு தோறும் மகாசிவராத்திரியையொட்டி மேல்மலையனுார் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் 10 நாள் பிரம்மோற்சவ விழா நடைபெறும், அப்போது நடைபெறும் தேரோட்டத்தின் போது புதிதாக தேர் செய்யப்படும். அந்த தேரில் அம்மன் அமர்ந்து வீதிவுலா வருவார், இந்த முறை இன்றும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது,

      தேரோட்டம் முடிந்ததும் தேவர்களும். முனிவர்களும் தேரைவிட்டு அகன்று சுயரூபம் பெற்று மறைந்து விடுகின்றனர், இந்த ஐதிகத்தின்படி ஒவ்வொரு வருடமும் தேரோட்ட நிகழ்ச்சி முடிந்தபிறகு அந்த தேரை பிரித்துவிடுவார்கள். அடுத்த வருட தேரோட்டத்துக்கு புதிய தேர் செய்யப்படும்.

குறி சொல்லுதல்

      அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் அமாவாசை மற்றும் விசேஷ நாட்களில் குறி சொல்லப்படுகிறது. கோவிலின் பலபகுதிகளில் குறி சொல்பவர்களை காணலாம். நினைத்த காரியம் நடக்குமா? திருமணம் எப்போது நடைபெறும்? காணாமல் போன பொருள் திரும்பவும் கிடைக்குமா? வேலை எப்போது கிடைக்கும்? கோர்ட்டு வழக்குகளில் சாதகமான தீ்ர்ப்பு கிடைக்குமா? என்பது பற்றி பக்தர்கள் கேட்கும் கேள்விகளுக்கு குறி சொல்பவர்கள் விடை கூறுகிறார்கள். குறி கேட்க செல்பவர்கள் கற்பூரம்  வாங்கி செல்லவேண்டும். இங்கு குறி கேட்க வரும் பக்தர்களின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

பேய் விரட்டுதல்

      இந்த கோவிலில் பேய் பிடித்தவர்களுக்கு பேய் விரட்டப்படுகிறது. பேய் பிடித்த பெண்கள் இந்த கோவிலில் உள்ள அக்னி தீர்த்தத்தில் நீராடி விட்டு ஈரச்சேலையுடன் கோவிலுக்கு வருகிறார்கள். கோவில் பூசாரி அந்த பெண்ணின் தலையில் கபால தீர்த்தத்தை தெளிக்கிறார். அப்போது அந்த பெண் ஆவேச சத்தம் போடுகிறாள். பூசாரி அந்த பெண்ணிடம் கற்பூரத்தை கொளுத்தி கொடுக்க அதை வாங்கி அவள் வாயில் போட்டுக் கொள்கிறாள். சிறிது நேரத்தில் அந்த பெண் அமைதி ஆகிறாள். அதன் பிறகு அந்த பெண் உடல் முழுவதும் மயான சாம்பல் பூசப்படுகிறது. இந்த நிலையில் அவளைப்பிடித்து இருந்த பேய்விலகி சென்று விடுவதாக நம்புகிறார்கள். அங்காளம்மன் கோவிலின் காவல் தெய்வம் பாவாடை ராயர் ஆவார்.

      துாய மனதுடன் ஆற்றல் மிக்க சக்தியான அங்காள பரமேஸ்வரி அம்மனை வழிபட்டால் நம்முடைய வாழ்க்கை சக்தியாக விளங்கும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

IAS IPS CIVIL SERVICE EXAM

  இந்தியக் குடியியல் பணிகள் தேர்வு       இந்தியக் குடியியல் பணிகள் தேர்வு ( Civil Services Examination (CSE) என்பது அகில இந்திய அளவில் இந்தியக் குடியியல் பணிகள் அதிகாரிகளுக்கான இந்திய நடுவண் அரசின் ஒன்றிய அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் (UPSE) ஆண்டுதோறும் நடத்தப்படும் போட்டித் தேர்வாகும் . இப்போட்டித் தேர்வின் குறைந்தபட்சக் கல்வித் தகுதி ஒரு இளநிலை பட்டம் ஆகும் . இப்போட்டித் தேர்வு மூன்று நிலைகளில் நடத்தப்படுகிறது . தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஓராண்டு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது . தகுதிகள் கல்வித்தகுதி இந்தியக் குடிமகனாக இருக்க வேண்டும் குறைந்த பட்ச கல்வி தகுதி , இந்தியப் பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் . வயது வரம்பு       இப்போட்டித்தேர்வில் கலந்து கொள்ள குறைந்த பட்ச வயது 21 ஆகும் .   அதிக பட்ச வயது வரம்பு , பொதுப் பிரிவினருக்கு 32 வயது , இதர பிற்படுத்த ப...

TN VAZHAKAADAL THURAI

  வேலைவாய்ப்பு தமிழ்நாடு வழக்காடல் துறை       அரசு தலைமை வழக்குரைஞர்   அலுவலகத்தில் ( சென்னை உயர்நீதி மன்றம் மற்றும் சென்னை உயர்நீதி மன்ற மதுரை கிளை ) 16 அலுவலக உதவியாளர் காலிப்பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன . பணி   -   அலுவலக உதவியாளர் பணிக்காலியிடங்கள் - 16         விவரங்கள் கல்வித்தகுதி - 8 ம்   வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும்.   நான்கு சக்கர வாகன உரிமம் பெற்ற விண்ணப்பதாரர்களுக்கு   முன்னுரிமை வழங்கப்படும் . வயது - 01.07.2020 அன்று 18 வயது நிரம்பியவராக   இருக்க வேண்டும் . பொதுப்பிரிவினர் - 18 க்கு மேல் 30 க்குள் BC,MBC                            - 18 க்கு மேல் 32 க்குள் SC,ST                      ...