முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மேல்மலையனூர் அருள்மிகு அங்காள பரமேஸ்வரி அம்மன்

 

  மேல்மலையனூர் அருள்மிகு     அங்காள  பரமேஸ்வரி அம்மன்



      தமிழ்நாட்டில் அதிசய சம்பவங்கள் நடைபெற்று வரும் ஆலயங்கள் ஏராளம் உள்ளன. அவற்றில் குறிப்பிடத்தக்கது விழுப்புரம் மாவட்டத்திலுள்ள மேல்மலையனூர் அருள்மிகு அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில், தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு நலமும், வளமும் வழங்கி வரும் ஆற்றல் மிக்க சக்தியாக அங்காள பரமேஸ்வரி அம்மன் விலங்குகிறார்.

புற்று கோவில்

      அமாவாசை நாட்களில் ஆலயத்தில் கூட்டம் நிரம்பி வழியும், கருவறையில் உள்ள புற்றையே தேவியாக வழிபட்டு பூசிக்கிண்டறார்கள். வருடாந்திர உற்சவத்தின் பொது கிராமத்தினர் புதிய தேரில் அவளை உட்கார வைத்து ஊர்வலமாக எடுத்து செல்கிறார்கள். பௌர்ணமி தினங்களில் அந்த ஆலயம் பக்தர்கள் வந்து வணங்க இருபத்தி நான்கு மணிநேரமும் திறந்து வைக்கப்பட்டு உள்ளது. பல கிராமத்திலும் இருந்து வரும் மக்கள் அங்கு வந்து பொங்கல் படைக்கின்றார்கள். பிப்ரவரி-மார்ச் மாதங்களில் அங்காள பரமேஸ்வரிக்கு நடைபெறும் வருடாந்திர திருவிழாவின்போது மயான கொள்ளை என்ற பெயரில் பெரிய விழா நடக்கும்போது பக்தர்கள் அங்கு பலதரப்பட்ட தானியங்களைக் கொண்டு வந்து உணவு சமைத்து அதை அங்காள பரமேஸ்வரிக்கு படைக்கிறார்கள். அங்கு மயானத்தில் அவளை ஆராதிக்கிறார்கள். பலர் சாமி ஆடிக்கொண்டே செல்வார்கள். அதைப் பார்க்கவே பயமாக இருக்கும். அங்காள பரமேஸ்வரிக்கு நாட்டின் பல இடங்களிலும் ஆலயங்கள் உள்ளன என்றாலும் அவளுக்கு மேல்மலையனூர் ஆலயமே முக்கியமான ஆலயம்.

தோ்

      ஆண்டு தோறும் மகாசிவராத்திரியையொட்டி மேல்மலையனுார் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் 10 நாள் பிரம்மோற்சவ விழா நடைபெறும், அப்போது நடைபெறும் தேரோட்டத்தின் போது புதிதாக தேர் செய்யப்படும். அந்த தேரில் அம்மன் அமர்ந்து வீதிவுலா வருவார், இந்த முறை இன்றும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது,

      தேரோட்டம் முடிந்ததும் தேவர்களும். முனிவர்களும் தேரைவிட்டு அகன்று சுயரூபம் பெற்று மறைந்து விடுகின்றனர், இந்த ஐதிகத்தின்படி ஒவ்வொரு வருடமும் தேரோட்ட நிகழ்ச்சி முடிந்தபிறகு அந்த தேரை பிரித்துவிடுவார்கள். அடுத்த வருட தேரோட்டத்துக்கு புதிய தேர் செய்யப்படும்.

குறி சொல்லுதல்

      அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் அமாவாசை மற்றும் விசேஷ நாட்களில் குறி சொல்லப்படுகிறது. கோவிலின் பலபகுதிகளில் குறி சொல்பவர்களை காணலாம். நினைத்த காரியம் நடக்குமா? திருமணம் எப்போது நடைபெறும்? காணாமல் போன பொருள் திரும்பவும் கிடைக்குமா? வேலை எப்போது கிடைக்கும்? கோர்ட்டு வழக்குகளில் சாதகமான தீ்ர்ப்பு கிடைக்குமா? என்பது பற்றி பக்தர்கள் கேட்கும் கேள்விகளுக்கு குறி சொல்பவர்கள் விடை கூறுகிறார்கள். குறி கேட்க செல்பவர்கள் கற்பூரம்  வாங்கி செல்லவேண்டும். இங்கு குறி கேட்க வரும் பக்தர்களின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

பேய் விரட்டுதல்

      இந்த கோவிலில் பேய் பிடித்தவர்களுக்கு பேய் விரட்டப்படுகிறது. பேய் பிடித்த பெண்கள் இந்த கோவிலில் உள்ள அக்னி தீர்த்தத்தில் நீராடி விட்டு ஈரச்சேலையுடன் கோவிலுக்கு வருகிறார்கள். கோவில் பூசாரி அந்த பெண்ணின் தலையில் கபால தீர்த்தத்தை தெளிக்கிறார். அப்போது அந்த பெண் ஆவேச சத்தம் போடுகிறாள். பூசாரி அந்த பெண்ணிடம் கற்பூரத்தை கொளுத்தி கொடுக்க அதை வாங்கி அவள் வாயில் போட்டுக் கொள்கிறாள். சிறிது நேரத்தில் அந்த பெண் அமைதி ஆகிறாள். அதன் பிறகு அந்த பெண் உடல் முழுவதும் மயான சாம்பல் பூசப்படுகிறது. இந்த நிலையில் அவளைப்பிடித்து இருந்த பேய்விலகி சென்று விடுவதாக நம்புகிறார்கள். அங்காளம்மன் கோவிலின் காவல் தெய்வம் பாவாடை ராயர் ஆவார்.

      துாய மனதுடன் ஆற்றல் மிக்க சக்தியான அங்காள பரமேஸ்வரி அம்மனை வழிபட்டால் நம்முடைய வாழ்க்கை சக்தியாக விளங்கும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மெட்ராஸ் உயர்நீதிமன்றம் சென்னை

  மெட்ராஸ் உயர்நீதிமன்றம் சென்னை       தமிழகத்தில் உள்ள அனைத்து கீழமை நீதி மன்றங்களில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் , நகல் பிரிவு அலுவலர் , சுகாதாரப் பணியாளர் , துப்புரவு பணியாளர் , தூய்மைப் பணியாளர் , தோட்டக்காரர் , தண்ணீர் ஊற்றுபவர் , காவலாளி , இரவுக் காவலர் , வாட்டர்மேன் மற்றும் வாட்டர்வுமன் , மசால்ஜி காலிப்பணியிடங்களை நிரப்ப இணையவழி விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன . நீதித்துறை மாவட்டந்தோறும் காலிப்பணியிடங்களின் விவரமும் வெளியிடப்பட்டுள்ளன .   மொத்த   காலிப்பணியிடங்கள் : 3557   பணியின் பெயர் மற்றும் காலிப்பணியிடங்களின்   விவரம்   1. அலுவலக உதவியாளர் - 1911 2. அலுவலக உதவியாளர் மற்றும் முழுநேர காவலர் - 1 3. நகல் பிரிவு அலுவலர் - 3 4. சுகாதார பணியாளர் - 110 5. தூய்மை பணியாளர் - 6 6. தூய்மை / துப்புரவு பணியாளர் - 17 7. தூய்மை / சுகாதாரப் பணியாளர் - 1 8. தோட்டக்காரர் - 28 9. காவலர் - 496 10. இரவுக்காவலர் - 185 11. இரவுக்காவலர் மற்றும் மசால்ஜி - 1...

IFS FOREST EXAMINATIONS இந்திய வனத்துறை அதிகாரி

  இந்திய வனத்துறை அதிகாரி (IFS) காலியிடப் பணிக்கான அறிவிப்பு - 2021       மத்திய அரசின் கீழ் காலியாக உள்ள வனத்துறை அதிகாரி பணியிடங்களை நிரப்பிடும் வகையில் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர் . மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் இப்பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர் . இதற்குத் தகுதியும் / விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம் .   மொத்த காலிப்பணியிடம் : 110 கல்வித்தகுதி கால்நடை பராமரிப்பு மற்றும் கால்நடை அறிவியல் , வேதியியல் , புவியியல் , கணிதம் , இயற்பியல் , புள்ளியியல் மற்றும் விலங்கியல் அல்லது விவசாயம் , வனவியல் போன்ற ஏதேனும் ஒர்த் துறையினை முதன்மைப் பாடமாகக் கொண்டு இளங்கலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் . வயது வரம்பு 1.8.2021 தேதியின்படி MBC , BC - 21- க்கு மேல் 35- க்குள் இருக்க வேண்டும் SC,ST   - 21- க்கு மேல் 37- க்குள் இருக்க வேண்டும் பொதுப்பிரிவினர் 21- க்கு மேல் 32- க்குள் இருக்க வேண்டும் தேர்வுக்கட்டணம...

VEETU VASATHI VAARIYAM TN HOUSING BOARD

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் வேலைவாய்ப்பு        அலுவலக உதவியாளர் மற்றும் ஓட்டுநர் பணிக்கான அறிவிக்கை அறிவிக்கை எண் . ப . தொ . நு . அ. 5/2643/2020.       தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் மற்றும் ஓட்டுநர் பணிக்கான விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலமாக வரவேற்கப்படுகின்றன .   பணி : அலுவலக உதவியாளர் மற்றும் ஓட்டுநர்                                               காலிப்பணியிடங்கள்   விவரங்கள் அலுவலக   உதவியாளர் : 10          ஓட்டுநர்           :           5   சம்பள ஏற்றமுறை       அலுவலக உதவியாளர் ரூ .15700-50,000 Level - 1             ...