முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மைலம் முருகன் திருக்கோவில்

                  நினைத்ததை தருபவன் மைலம் முருகன்


    ஒரு சிறு குன்றின் மீது அமர்ந்திருக்கும் மைலம் முருகன் கோவில் தமிழகத்தின் ஏழாம்படையாக கருதலாம் . அந்த அளவிற்கு வல்லமை பெற்ற திருக்கோவில் இந்த திருக்கோவில். திண்டிவனத்திற்கு அருகிலும் பாண்டிச்சேரிக்கு சற்று தொலைவிலும் மைலம் என்ற கிராமத்தில் அமைந்துள்ளது.

கிருத்திகை விரத தினங்களில் விரதம் இருந்து மைலம் முருகனை தரிசித்தால் நினைத்தது கண்டிப்பாக நிறைவேறும் அந்த அளவிற்கு வல்லமை பெற்ற திருக்கோவில்தான் மைலம் முருகன் திருக்கோவில் .

 அபிஷேகம்  

    வள்ளி - தெய்வானையுடன்  இணைந்து நிற்கும் மைலம் முருகன் ஒரு கையில் வேலுடனும், மற்றொரு கையில் சேவற் கொடியுடனும் பக்தர்களுக்கு காட்சி காட்சி தருகிறார். பெரும்பாலான கோவில்களில் முருகனின் வாகனமான மயில் தெற்கு நோக்கியே, நேராகவே இருக்கும். ஆனால் இங்கு மட்டும் வடக்கு திசையை நோக்கியபடி இருப்பது இத்திருத்தலத்தினில்தான் மிகச்சிறப்பு ஆகையில்தான் நினைத்ததை முடித்து வைக்கிறார் மைலம் முருகன் இத்திருத்தலத்தில் ஆடி கிருத்திகை திருவிழா மிக சிறப்பாக நடைபெறும் ஆடி கிருத்திகையன்று அதிகாலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு, வள்ளி, தெய்வானை முருக பெருமானுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், தேன் , சந்தனம், விபூதி ஆகியவற்றால் அபிஷேகங்கள் செய்யப்படும். பின்னர் தங்க கவசத்தில் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளிப்பார். இக்காட்சியினை பார்க்க பல ஊர்களிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள். அன்றைய தினத்தில் கடுமையாக விரதம் இருந்து மைலம் முருகனை வழிபட்டால் நினைத்ததை கண்டிப்பாக தருவார்மைலம் கோவிலில் முருகன் மூன்று விதமான உற்சவராகக் காட்சியளிக்கிறார். இவர்களில் பிரதான உற்சவர் வள்ளி - தெய்வானை சமோதரான பாலசுப்பிரமணியர்.

    வாகனம் 

     பகலில் வெள்ளிக்காப்பு அணிந்தும், மாலை பூஜைக்கு பிறகு தங்கக் காப்பு அணிந்தும் அருள் பாலிக்கும் இவர் மாதாந்திர கார்திகையிலும், பங்குனி உத்திரப் பெருவிழாவிலும் வீதியுலா வருகிறார்.பங்குனி உத்திரம் இங்கு பன்னிரண்டு நாட்கள் பிரம்மோற்சவமாக விமர்சையாக நடக்கிறது. முருகனுக்கு மயில் மட்டுமின்றி, பல்வேறு விதமான வாகனங்கள் இருப்பதாக புராணங்கள் தெரிவிக்கின்றன. இதை நினைவுறுத்தும் விதமாக பங்குனி உத்திரப் பெருவிழாவில் திருமணக் கோலத்தில் தினம் ஒரு வாகனத்தில் முருகன் வீதியுலா வருகிறார். மயில், யானை, ஆட்டுக்கிடா, நாகம், பூதம் என விதம் விதமான வாகனங்களில் வளம் வருவார் இந்த மூலவர்.

        இரண்டாவது மூலவர் வள்ளி-தெய்வானை சமேத முத்துக்குமார சுவாமி, பரணி நட்சத்திரத்தின்போது வீதியுலா வரும் இவர், தினசரி சுற்றுப் பிரகாரத்தில் இருந்தபடி அருள் பாலிக்கிறார். மாசிமக தீர்த்தவாரியின்போது அருள் வழங்கும் இவர் 6வது நாளன்று திரும்பி வருவார்.

    மூன்றாவது உற்சவர் ஆறுமுகங்கள் கொண்ட ஷண்முக பெருமான். கந்த சஷ்டி உற்சவத்தின்போது ஆறு நாட்கள் வீதியுலா வருவது இவர்தான். இவை தவிர சித்திரையில் வசந்த உற்சவம், ஆனியில் ஏழு நாட்கள்  லட்சார்ச்சனை என இங்கு பெரும்பாலும் திருவிழா மயம்தான்.

        முருகனுக்கு மிகவும் உகந்த நொச்சி மரங்கள் மயிலம் மலையில் ஏராளமாக உள்ளன. தினமும் காலை பூஜையின்போது நொச்சி இலைகளை மாலையாகத் தொடுத்து மூலவருக்கு, உரசவ மூர்த்திகளுக்கும் அணிவிக்கிறார்கள். அதன் பிறகே மற்ற பூமாலைகளை அணிவிக்கிறார்கள்.

  அர்ச்சனை      

    மூலவர் வீற்றிருக்கும் கருவறை மண்டபத்துக்கு வெளியில் பிரமாண்டமான வேலும் மயிலும் இருக்கின்றன. மைலம் கோவிலில் செவ்வாய் கிழமை தோறும் காலசந்தி பூஜையின்போது வேலாயுதத்துக்கு அர்ச்சனை செய்கிறார்கள். இப்படி அர்ச்சனை செய்யும் பக்தர்களுக்குக் கடன் தொல்லையுடன் பணப்பிரச்னைகளும் அகலும் என்பது நம்பிக்கை.

       இதேபோல் உற்சவமூர்த்தி முருகப்பெருமானின் அருகில் அவரின் படைத் தளபதியான வீரபாகுவும் உற்சவராக இருக்கிறார். செவ்வாய்க்கிழமை காலையில் இவருக்கு பாலபிஷேகம் செய்து, அர்ச்சனை செய்தல் சீக்கிரம் திருமணம் நடக்கும் என்பதால், ஒவ்வொரு செவ்வாயிலும் ஏராளமான பெண்கள் இங்கு வருகிறார்கள்.

நினைத்தால் நடக்கும்

    இத்தகைய சக்தி வாய்ந்த இத்திருத்தலத்திற்கு ஒரு முறை வருகை தந்து, அருள் மிகு மைலம் முருகனை தரிசித்தால் நினைத்ததை மைலம் முருகனிடம் பெற்று வாழ்க்கையை வசந்தமாக வாழலாம்.

                                                               வாருங்கள் ஒருமுறை

                                                 வசந்தமுடன் வாழுங்கள் ஆயுள்வரை.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

REGISTATION DEPARTMENT பதிவுத்துறையில் வேலை

  தமிழக அரசின் பதிவுத்துறையில் வேலை வாய்ப்பு அறிவிப்பு முத்திரைத்தாள் விற்பனையாளர் பணி   STAMP VENDOR        தமிழ்நாடு பதிவுத்துறையின் கீழ் செயல்படும் சார்பதிவாளர் அலுவலகத்தில் முத்திரைத்தாள் விற்பனையாளர் பணிக்கு விண்ணப்பங்கள் மாவட்ட பதிவாளர் அலுவலகங்களில் பெற்றுக்கொள்ளலாம் . தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 790 காலிப்பணியிடங்கள் உள்ளன . மாவட்ட வாரியாக காலியிடங்கள் கொடுக்கப்பட்டுள்ளன . மாவட்ட வாரியாக காலியிடங்கள் விவரம் 1. வட சென்னை - 31 2. தென் சென்னை - 38 3. மத்திய சென்னை - 21 4. காஞ்சிபுரம் - 51 5. செங்கல்பட்டு - 5 6. வேலூர் - 58 7. அரக்கோணம் - 5 8. செய்யாறு - 39 9. திருவண்ணாமலை - 8 10. சேலம் ( கிழக்கு ) - 8 11. சேலம் ( மேற்கு ) - 10 12. நாமக்கல் - 16 13. தர்மபுரி - 9 14. கிருஷ்ணகிரி - 11 15. கடலூர் - 11 16. விழுப்புரம் - 6 17. சிதம்பரம் - 4 18. திண்டிவனம் - 3 19. கள்ளக்குறிச்சி   - 9 20. விருத்தாசலம் - 19 21. புதுக்கோட்டை - 11 22. அரியலூர் - 23 23. கரூர் - 4 24. தஞ்சாவூர் - 6

TNEB FIELD ASSISTANT TRAINEE

  தமிழக மின்வாரியத்தில் (TNEB) வேலை வாய்ப்பு  Field Asssistant (Trainee)       கடந்த ஆண்டு (NOTIFICATION NO.05/2020, 19.03.2020) Field Assistant (Trainee) கள உதவியாளர் ( பயிற்சி ) என்ற வேலை வாய்ப்பினை தமிழக மின்வாரியத் துறை அறிவித்தது . கொரோனா காரணமாக அறிவிப்பு நிறுத்தப்பட்டது . இந்த ஆண்டு (2021) மீண்டும் தமிழக மின்வாரிய துறை கள உதவியாளர் ( பயிற்சி ) வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிடப்பட்டது .   மொத்த காலியிடங்கள் : 2900 பணி : Field Asssistant (Trainee) கல்வித்தகுதி : ITI   வயது : SC , SC (A), ST and Destitute Widows of all castes   : 18 க்கு மேல் 35 க்குள் MBC / DC, BCO, BCM               : 18 க்கு மேல் 32 க்குள் பொதுப்பிரிவினர்               : 18 க்கு மேல் 30 க்குள்   கட்டணம் OC, BCD, BCM, MBC/DC   - Rs.1000/- SC, SCA, ST                       - Rs.500/- Destitute Widows and differently abled persons     - Rs.500/-   விண்ணப்பிக்க ஆரம்ப தேதி :15.02.2021 கடைசி தேதி                              : 16.03.2021

MATHIYA ARASU VELLAI

  மத்திய அரசு வேலை   10 ம்  வகுப்பு படித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை     மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள MTS பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வை பணியாளர்கள் தேர்வாணையம் அறிவித்துள்ளது .       மத்திய அரசின் கீழ் இயங்கும் பல்வேறு துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்களை பணியாளர்கள் தேர்வாணையம் மூலம் தேர்வு நடத்தி நிரப்பப்பட்டு வருகிறது . அந்த வகையில் , தற்போது MTS எனப்படும் MULTI TASKING STAFF உதவியாளர்கள் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது . அரசுப் பணிக்கு எதிர்நோக்கி தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு இது ஓர் அரிய   வாய்ப்பாகும் . இதற்கு தகுதியும் , விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் .  இது பற்றிய விவரம் பின்வருமாறு அமைப்பு               :     மத்திய அரசு பதவி                      :      MTS (MULTI TASKING STAFF) மொத்த காலியிடங்கள்   :    இந்தியா முழுவதும் தகுதி                      :     10 ம் வகுப்பு தேர்ச்சி வயது  பொது பிரிவினர் : 18 லிருந்து 25 க்குள்